states

முஸ்லிம் பக்கீர்கள் மீது ஈவிரக்கமற்று இந்துத்துவா கும்பலின் தாக்குதல்!

புதுதில்லி, ஜூன் 9- உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்த பக்கீர்களை, இந்துத்துவா கும்பல் ஒன்று மோச மான வகையில் அவமதித்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. பக்கீர்கள் என்பவர்கள், இஸ்லாமிய மார்க்கத் திற்கு தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். இவர்கள் அல்லா பற்றிய பாடல்களை இசையுடன் வீடு,  வீடாகப் பாடிச்செல்வார்கள். மக்களும் மதம் கடந்து இவர்களை வரவேற்று காணிக்கை அளிப்பார்கள். அப்போது அந்த வீடுகளில் உள்ளோருக்கு அல்லா  அருள்புரிய வேண்டும் என்று தாங்கள் கொண்டுசெல்  லும் மயில்பீலியால் தலையைத் தடவிக்கொடுத்து ஆசிர்வதிப்பார்கள்.  அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா  என்ற பகுதியில் உள்ள டெகூர் கிராமத்தில் வழிப் போக்கர்களாக நடந்து சென்று கொண்டிருந்த பக்கீர்  களை, கழுத்தில் காவித்துண்டு அணிந்த இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள் மோசமான வகையில் அவ மதித்து துன்புறுத்தி உள்ளனர்.  “எங்கிருந்து வருகிறீர்கள்... என்றும், ஆதார் கார்டு களை இருக்கிறதா?” என்றும் கேட்டு அவர்களிடம் தக ராறை ஆரம்பித்துள்ளனர்.

அதற்கு நாங்கள் துறவி களைப் போன்றவர்கள்.. எங்களிடம் ஆதார் அட்டை யெல்லாம் இல்லை என்று பக்கீர்கள் கூறியுள்ளனர். ஆனால், வேண்டுமென்றே பிரச்சனை செய்த இந்துத்துவா கும்பல், பக்கீர்களைச் சுற்றி நின்று.. “தீவிரவாதிகள்., தீவிரவாதிகள்.. ஜிஹாதிகள்...” என்று  கோஷம் போட்டுள்ளனர். அத்துடன், பிரம்பால் அவர்களை தாக்கி, “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறிக்  கொண்டே தோப்புக்கரணமும் போட வைத்துள்ளனர். வயதான அந்த பக்கீர்களும் மிகுந்த பயத்துடனும் அழாத குறையாக அவர்களிடம் மாட்டிக்கொண்டு பெரும் சித்ரவதையை அனுபவித்துள்ளனர்.  இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படு வதாக 15-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களின் விமர் சனத்தை வைத்துள்ள நிலையில், பாஜக ஆளும் உ.பி. மாநிலத்தில் பக்கீர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வீடியோவாக வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.