states

ஒரே நாடு; ஒரே தேர்தலை எதிர்த்து தீர்மானம்?

புதுதில்லி, செப். 4 - “ஒரே நாடு; ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக, நாடா ளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.  செப்டம்பர் 18 முதல் செப் டம்பர் 22 வரை ஏற்பாடு செய் யப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், நாடு முழுவதும் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே  நாடு; ஒரே தேர்தல்’ மசோ தாவை தாக்கல் செய்ய  மோடி அரசு திட்டமிட்டுள்ள தாக தெரிகிறது. மறுபுறத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிப்பதற்கான ஆலோ சனையில் ‘இந்தியா’ கூட் டணி இறங்கியுள்ளது. காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே இல்லத்தில் இன்று (செப்.5) ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், இது தொடர்பாக சந்தித்து ஆலோ சனை நடத்த உள்ளனர். இதனிடையே, ‘இந் தியா’ கூட்டணியின் ஆலோச னைக் கூட்டத்தில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை எதி ர்த்து, நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்து முடி வுக்கு எடுக்கப்பட உள்ளதாக தில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன.