ரயில்வேயையும், மின்சார வாரியங்களையும் பல்வேறு கூறுகளாகப் பிரித்து, தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்துவதென கேரள மாநில ரயில்வே - மின்வாரிய ஊழியர்களின் சிறப்பு மாநாடு முடிவு செய்துள்ளது.
ரயில்வேயை உற்பத்தி, முறைப்படுத்தல், இயக்குதல் என்ற அடிப்படையிலும், மின் சார வாரியத்தை உற்பத்தி, பரி வர்த்தனை, விநியோகம் என்ற ரீதி யிலும் பல்வேறு கூறுகளாகப் பிரித்து, தனியாருக்கு வழங்க ஒன் றிய பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரயில்வேயின் பாதைகள், நிலை யங்கள் நிலங்கள் மற்றும் மின் சார வாரியம் மேற்கொண்டுவரும் மின் விநியோகம் என அனைத்தை யும், தேசிய பணமாக்கும் திட்டத் தன் கீழ் (National Monetisation Pipeline) தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் இந்த முடிவானது, சாமானிய மக்களைக் கடுமையாக பாதிக்கும். இதற்கெதி ராக ரயில்வே துறையில் இயங்கும் பல்வேறு சங்கங்களும், மின்சார வாரியத்தில் இயங்கும் பல்வேறு சங்கங்களும் இணைந்து நாடு முழு வதும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. அதனொரு பகுதியாக, ஒன்றிய அரசின் தனியார்மய முயற்சி களுக்கு எதிராக, கேரள மாநி லத்தில் பணிபுரியும் மின்சார வாரிய ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களின் கூட்டு சிறப்பு மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அக்டோபர் 10-ஆம் தேதிக்கு முன்பு மாவட்ட அளவில் சிறப்பு மாநாடு களை கூட்டவும், நவம்பர் 3 அன்று தில்லியில் நாடு தழுவிய அளவில் பேரணி - ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டதுடன், ஒன் றிய அரசின் இந்த இழிவான நட வடிக்கைகள் குறித்து மக்களிடம் துண்டறிக்கைகள் மூலம் அம்பலப் படுத்தவும், வாயிற்கூட்டங்கள் நடத்த வும் முடிவுகள் எடுக்கப்பட்டன.