states

பஞ்சாப் தேர்தல் தேதி மாற்றம்

புதுதில்லி, ஜன.17- பிப்.14ல் நடக்கவிருந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி பிப்.20க்கு மாற்றப்பட்டுள்ளது. 117 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்ட சபைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரேகட்ட மாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல்  16 வரை கடைப்பிடிக்கப்படுகிறது.  குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி சீக்கியர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனிதப்பயணம் மேற்கொள் வர்கள். அங்கு உள்ள குரு ரவிதாஸ் நினை விடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் சீக்கியர்கள் தங்க ளின் புனித பயணமான குரு ரவிதாஸ் நினை விடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்பட லாம். தேர்தலில் வாக்களிக்கும் சீக்கியர் களின் எண்ணிக்கையும் குறையலாம். இதனால், தேர்தலை தள்ளிவைக்கக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதின.  இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் திங்களன்று ஆலோ சனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பிறகு பஞ்சாப் தேர்தலை 20 ஆம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.