புதுதில்லி, மார்ச் 12- பொதுத்துறை நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ. 49 ஆயிரத்து 59 கோடியை, ஒன்றிய அரசுக்கு ஈவுத்தொகையாக (Dividend) வழங்கியுள்ளன. இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் (DIPAM) செயலா் துகின் காந்த பாண்டே டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பங்கு மூல தனத்துக்கு பொதுத் துறை நிறு வனங்கள் வழங்க வேண்டிய ஈவுத்தொகை நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ. 49 ஆயிரத்து 059 கோடி பெறப்பட்டுள்ளது. நால்கோ (NALCO) நிறுவனம் ரூ. 283 கோடியும், பிபிசிஎல் (BPCL) ரூ. 575 கோடியும், எம்எஸ்டிசி (MSTC) ரூ. 30 கோடியும் ஈவுத் தொகையாக வழங்கி யுள்ளன. என்பிடிபிசி (NTPC) நிறுவனத்திட மிருந்து மொத்தம் இதுவரை ரூ. 1,982 கோடி பெறப்பட்டுள்ளது அதேபோன்று, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்’ (IOC) நிறுவனத்திட மிருந்து ரூ. 1,939 கோடி பெறப் பட்டுள்ளது. இவைதவிர, என்எச்பிசி (NHPC) நிறுவனத்திடமிருந்து ரூ. 934 கோடி, கெயில் (GAIL )நிறு வனத்திடமிருந்து ரூ. 914 கோடி, ‘ஆயில் இந்தியா’ (Oil India) நிறு வனத்திடமிருந்து ரூ. 353 கோடி ஈவுத்தொகை பெறப்பட்டுள்ளது. இவ்வாறு துகின் காந்த பாண்டே கூறியுள்ளார்.