states

img

மோடி அரசைக் கண்டித்து நாளை மறியல் போர்... ஏன்?

செப்டம்பர் 7 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்துகிறது. இது தொடர்பாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த நேர்காணல்:

    செப்டம்பர் 7 மறியல் போராட்டம் பற்றி...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அகில இந்திய அளவில் செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதி வரை  விலை வாசி உயர்வுக்கு காரணமான மோடி அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தியும் வேலை யின்மையால் வாடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம். செப்டம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை வீடுவீடாக, வீதி வீதியாக பிரச்சாரம் செய்துள்ளோம். இதன் நிறைவாக செப்டம்பர் 7 அன்று ரயில் மறியல் போராட்ட மும், ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டமும் நடத்த தீர்மானித்துள்ளோம். தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கு அதிகமா னோர் இப்போராட்டங்களில் பங்கேற்க ஆயத்த ப்பணிகளை தீவிரமாக செய்து வருகிறோம்.  

    விலைவாசி,  வேலையின்மையை ஏன்  பிரதான பிரச்சனையாக எடுத்துள்ளீர்கள்?

மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டு நிறைவு பெறுகிற இந்த சூழ்நிலையில், அவர் தேர்தலில் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளார். குறிப் பாக விலைவாசியை கட்டுப்படுத்துவோம்; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம்; விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிப்போம் போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்துத்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் இன்று வரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கு நேர்மாறாக மக்கள் தலையில் நாளுக்குநாள் சுமைகளை ஏற்றுவது, விலைவாசியை அதிகரிப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்ப தற்கான நடவடிக்கைகளை அனுதினமும் மேற்கொண்டு,மக்களை நெருப்பிலிட்ட புழுக்களைப் போல் துடிக்கக்கூடிய அளவுக்கு நிலைமையை கொண்டுவந்துள்ளார்.

    சமையல் எரிவாயு விலை ரூ.200 குறைத்துள்ளாரே மோடி?

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருப்பதாகவும் அது   பெண்களுக்கு அளித்துள்ள பரிசு என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. 2014 ஆம் ஆண்டு  பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை 410 ரூபாய்க்கு இருந்தது. ஆனால் மோடி  ஆட்சியில் 1210 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. 200 ரூபாயை குறைத்தது மோடி ஆட்சி யின் சாதனை என்று சொல்லும் பாஜகவினர், 400 ரூபாயிலிருந்து 1210 ரூபாய்க்கு உயர்த்தி யதை ஏன் ‘சாதனை’ என்று சொல்ல மறுக்கிறார்கள்? பெட்ரோல் டீசல் விலையும் 2014 ஆம் ஆண்டில் இருந்ததைவிட அதிகமாக, 100 ரூபாய், 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சர்வ தேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 130 டாலராக இருந்தபோது, பெட்ரோல் 70 ரூபாய்க்கும் டீசல் 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஒரு சிலிண்டர்  410 ரூபாய்க்கு விநியோகம் செய்யப்பட்டது.  ஆனால் தற் போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை  65 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.அப்படி யெனில் 70 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் 35  ரூபாய்க்கும் டீசல் 30 ரூபாய்க்கும் வந்திருக்க வேண்டும். ஒரு சிலிண்டர் 210 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோதும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டதைத்தான் பார்க்கிறோம்.பெட்ரோல் டீசல் மீது போடப்பட்ட செஸ் மற்றும் சர்சார்ஜ் வரி மட்டும் 38 லட்சம் கோடி  ரூபாய் மக்கள் மீது சுமையை ஏற்றி  கொள்ளை யடிக்கப்பட்டிருப்பதாக விபரங்கள் தெரி விக்கின்றன.

    அரிசிக்கு வரி போட்ட மோடி  அரசு, உணவுப் பாதுகாப்பை எப்படிப் பறித்துள்ளது?

பிரிட்டிஷார் ஆட்சியில் கூட அரிசிக்கும் கோதுமைக்கும் வரி போட்டதாக வரலாறு இல்லை. ஆனால் அரிசிக்கும் கோதுமைக்கும் ஜிஎஸ்டி வரி போட்டு ஏழை எளிய மக்களின் வயிற்றிலடிக்கும் அரசாகத்தான் மோடி அரசு உள்ளது. விவசாயிகளின் வருமானத்தையும் இரட்டிப்பாக்கவில்லை. நெல்,கரும்பு உள்பட பல விளைபொருட்களுக்கு நியாயமான கொள்முதல் விலையை தீர்மானிக்கவில்லை. கொள்முதல் விலையை தீர்மானிக்கும்  சட்டத்தை மோடி அரசு இயற்றாமல், விவசாயி கள் போராட்டத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை.இதற்காக விவசாயிகள் மீண்டும் மீண்டும் போராடக்கூடிய நிலைமைதான் உள்ளது. சமீபத்தில் வந்துள்ள அரசு  ஆய்வுகள் என்ன கூறுகிறது என்றால், 3 வேளை உணவு  சாப்பிடுபவர்கள்  கடந்த ஆண்டை விட இந்தாண்டில் உணவுக்காக தங்களது வரு மானத்திலிருந்து 37 சதவீதம் அதிகமாக செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதர பொருள்களுக்கு 25 சதவீதம் அதிக மாக செலவழிக்கின்றனர் என்று தெரிவிக்கப்படு கிறது.

    தனிநபர் வருமானத்தை உயர்த்தி விட்டோம் என்றும் பாஜக ஆட்சி யாளர்கள் சொல்கிறார்களே!

சமீபத்தில் ஆய்வாளர்கள் கூறியதாக பத்திரிகைகளில் வந்திருக்கக்கூடிய செய்தி களில், உலக நாடுகளின் தனிநபர் வருமான த்தை கணக்கிட்டுப் பார்க்கிறபோது,ஜி20 என்கிற 20 நாடுகள் பட்டியலில், தனிநபர் வரு மானத்தில் இந்தியா கடைசி இடத்தில் இருப்ப தாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அமெரிக்கா வில் தனிநபர் வருமானம் 75 ஆயிரம் டாலர்கள் என்றால், இந்தியாவில் தனிநபர் வருமானம் வெறும் 6 ஆயிரம் டாலர்.இதில் எங்கே இந்தியா வளர்ந்திருக்கிறது? 2004 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு  வரை தேசிய உற்பத்தி 183 சதவீதம் அதிகரித்து இருந்ததாக கூறுகின்றனர். அதன் பிறகான 2014 இல் இருந்து 2023 வரை 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் தேசிய உற்பத்தி வெறும் 83 சதவீதம்தான். இதில் எது வளர்ச்சி? முந்தைய  ஆட்சியில் ஏற்பட்ட சரிபாதி வளர்ச்சியைக்கூட அடையாத மோடி அரசு, வல்லரசு ஆகிவிட்ட தாகக்கூறி, தில்லுமுல்லு செய்கிறது.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் நிலை என்ன?

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இடதுசாரி கட்சிகள் போராடி, கிராமப்புற மக்களுக்காக நூறுநாள் வேலைத்திட்ட மான மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைத் திட்டத்தை கொண்டுவந்தோம். மோடி அரசு  இத்திட்டத்திற்கு ஒதுக்கக்கூடிய நிதியை படிப்படியாக குறைத்தது. வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை முறையாக வழங்கவில்லை. 2023-24 பட்ஜெட்டில் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு வெறும் ரூ.60 ஆயிரம் கோடி நிதியை மட்டும் ஒதுக்கியது.கடந்த ஆண்டுகளில் ஒதுக்கிய நிதியில் 33 சதவீதத்தை வெட்டிக் குறைத்தது.சமூகநலத் திட்டங்களுக்கான நிதியையும் மோடி அரசு குறைத்தது. இந்த திட்டங்களையே இல்லா மல் ஆக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 

மோடி அரசு - அதானி - அம்பானி-  கூட்டுக் களவாணி முதலாளித்து வத்தின் விளைவுகள் என்ன?

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் மேலும் சலுகை களை மோடி அரசு வாரிக் கொடுத்துள்ளது. தேசிய வங்கிகளில் கார்ப்பரேட் முதலாளி கள் வாங்கிய ரூ.15.50 லட்சம் கோடியை வராக் கடனாக மோடி  அரசு தள்ளுபடி செய்துள்ளது. கார்ப்பரேட் முதலாளியான அதானி எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறார்;  எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என்று ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. லண்டனிலிருந்து வெளிவரக்கூடிய ‘கார்டியன்’ பத்திரிகை இந்த ஊழலை மேலும்  வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.மோடி ஆட்சிக்கு வந்தபோது, அதானியின் சொத்து 66  ஆயிரம் கோடி ரூபாய்.மோடியின் 9ஆண்டு கால ஆட்சியில் அதானியின் சொத்து மதிப்பு ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.உலகத்தில் உள்ள 10 பெரும் பணக்காரர்களில் 4 ஆவது பணக்காரராக அதானி உயர்ந்துள் ளார். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய  அதானியை வளர்ச்சியை ஆய்வு செய்தபோது தான் பல முறைகேடுகள் வெளிவந்துள்ளன. பினாமியாக வரக்கூடிய பணத்தை மொரீ ஷியசுக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து இந்தி யாவுக்கு முதலீடுகளாக கொண்டுவரப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணத்தை அதானி நிறுவனத்தில் யார் முதலீடு செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கு அதானி பதில் சொல்ல வேண்டு மல்லவா? பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்பு பதில் சொல்ல வேண்டு மல்லவா? 2013 ஆம் ஆண்டிலேயே இதுகுறித்து விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த  விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற பெரும் முத லாளிகள் வளர்ந்திருக்கிறார்களே தவிர, சாதாரண ஏழை எளிய மக்கள் கடும் நெருக்கடி க்குள் தள்ளப்பட்டுள்ளனர்.மோடி அரசின்  கார்ப்பரேட் ஆதரவுக்கொள்கை, ஏழை, எளிய மக்களுக்கு விரோதமான கொள்கை, வேலை யில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக்கூடிய நிலைமை ஆகியவற்றை எதிர்த்துத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  செப்டம்பர் 7 அன்று மாபெரும் மறியல்  போராட்டம் நடத்தப்படுகிறது.பெருமள வில் மக்களைத் திரட்டி,வரலாற்று முக்கியத் துவமான இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

- தொகுப்பு: எஸ்.உத்தண்டராஜ்