states

இரண்டாம் பிரசவத்தில் பெண் குழந்தை பெறுபவர்களுக்கு சலுகைகள்

புதுதில்லி,பிப்.7- இரண்டாவது பிரசவ த்தில் பெண் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு  பிரசவ கால சலுகைகளை வழங்க ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. முதல் பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு `பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.  இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களு க்கும் இந்த சலுகைகளை வழங்க அரசு திட்டமிட்டுள் ளது. பெண் குழந்தை பிறப்ப தை தவிர்க்க பாலினத்தை அறியும் முயற்சியை கைவிடச் செய்யும் நோக்கில் இந்த சலுகை வழங்க திட்ட மிட்டுள்ளதாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.