states

img

முஸ்லிம்களைக் குறிவைத்து “மோடி கும்பலின்” சம்பல் அட்டூழியம்!

நரேந்திர மோடியால் இப்போதெல்லாம் உண்மைக்கு நெருக்கமாகக்கூட எதையும் கூற முடியவில்லை. இதற்குச் சரி யான உதாரணம், வாரணாசியில் போட்டியிடுவ தற்காக வேட்புமனுவை அவர் தாக்கல் செய்த பின் ஒரு நேர்காணலில் அவர் பொய்யாக உதிர்த்துள்ள வாசகங்களாகும். “அதிகக் குழந்தைகளைப் பெற்றிருப்பவர்கள்” என்று அவர் கூறியது, முஸ்லிம்களை அர்த்தப்படுத்தி அல்லவாம்.

அவ்வாறு பேசியிருந்தால் நான் தகுதியற்றவன்

அதேபோன்றே அவர் இப்போது,  “இந்து - முஸ்லிம் குறித்து நான் பேசியதில்லை” என்றும், “அவ்வாறு பேசியிருந்தால் நான் பொது வாழ்வில் இருப்பதற்கே தகுதியற்றவன்” என்றும் கூறியிருக்கிறார். ஏப்ரல் 9 அன்று பன்ஸ்வாராவில் மோடி  பேசியதைக் கேட்ட அல்லது பார்த்த எவரொரு வரும், அவர் “ஊடுருவல்காரர்கள்” என்றும், “அதிகக் குழந்தைகளைப் பெற்றிருப்பவர்கள்” என்றும் கூறியதென்பது முஸ்லிம்களைக் குறிவைத்துத்தான் என்பதை நன்கு  அறிவார்கள். நாட்டின் செல்வாதாரங்கள் மீது முஸ்லிம்களுக்கும் உரிமை உண்டு என்று மன்மோகன் சிங் விடுத்த அறிக்கையை மேற்கோள்காட்டிதான் அவர் இவ்வாறு கூறினார் என்பது தெளிவான ஒன்று. உண்மையில், முஸ்லிம்கள் என்றால் ‘அதிகமாகக் குழந்தைகளைப் பெறுபவர்கள்’ என்பது மோடியின் அழுத்தமான கருத்தாகும். 2002இல் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி, “நமக்கு ஐந்து, அவர்களுக்கு இருபத்தைந்து” என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான அகதிகள் முகாம்களை அவர் “பிள்ளைகளை உற்பத்தி செய்திடும் மையங்களாக மாறியிருக்கின்றன” என்றும் குற்றஞ்சாட்டியவர்தான். இத்தகைய இந்து-முஸ்லிம் சொல்லாடல்தான் அவரை முஸ்லிம்களுக்கான “கல்லறை” என்றும்,  இந்துக்களுக்கான சுடுகாடு என்றும் உத்தரப்பிர தேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை பேச வைத்தது.

வெளிச்சத்துக்கு வந்த அராஜகம்

பிரதமரும் அவருடைய கூட்டாளிகளும் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிப்ப தற்காகவே அவர்களை இவ்வாறு இழிவாக வும், குறிவைத்தும் தாக்கிக் கொண்டிருக்கின்ற னர். மே 7 அன்று மக்களவைக்கான தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மக்கள வைத் தொகுதியில் இதுதான் நடந்தது. இத்தொகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமங்களில், வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகள் முன்பு நின்று கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்கள் தொடுத்திருக்கின்றனர். இதனை  இணைய தளமான ஸ்க்ரோல்.இன் (scroll.in) வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

ஓவரி - வீடியோ அம்பலம்

மன்சூர்பூர், ஓவரி, சபாஷ்பூர் களன், முபாரக்பூர் மற்றும் பல கிராமங்களில் இதேபோன்ற பாணியை காவல்துறையினர் மேற்கொண்டிருக்கிறார்கள். 30-40 காவல்துறையினருடனான காவல்துறை வாக னங்கள் காலை 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையே ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் சென்று, அங்கு வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்தவர்களிடமிருந்து அவர்களின் ஆதார் அட்டைகளை பறித்துக் கொண்டுள்ளார்கள். பின்னர் அவ்வாறு நின்று கொண்டிருந்த பெண்கள் உட்பட அனைவரை யும் அடித்து நொறுக்கி விரட்டியடித்திருக் கிறார்கள். ஓவரி என்னுமிடத்தில் ஜுனியர் உயர்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த வாக்குச்சாவடி முன்பு நின்றுகொண்டிருந்த வாக்காளர்கள்,  எவ்வாறெல்லாம் காவல்துறை யினரால் விரட்டி அடிக்கப்பட்டனர் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோ அம்பலப்படுத்தி இருக்கிறது.

மாவட்ட அதிகாரிகளின்  ஒப்புதலின்றி நடந்திருக்காது

இந்த வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான வை அஸ்மௌலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டவைகளாகும். சம்பல் நகரத்தில் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் உள்ள சில வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். முஸ்லிம்கள் அல்லாதவர்கள் அதிகம்  வாழும் இடங்களில் உள்ள வாக்குச்சாவடி களில் இத்தகைய சம்பவம் எதுவும் நடைபெற வில்லை என்பது குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். இவ்வாறு நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் தனிப்பட்ட ஒன்றாகக் கருத முடியாது. மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் அல்லது அவர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது. “முஸ்லிம் வாக்காளர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்ட சதி” என்று சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரும், குண்டர்கி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ-வுமான ஜியாவுர் ரஹ்மான் என்பவர் கூறியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலின்போது சம்பல் தொகுதி, சமாஜ்வாதிக் கட்சியால் வெல்லப்பட்ட தொகுதியாகும். 

பாதிக்கப்பட்டவரிடமே  மறுப்பு வாக்குமூலம்

இந்த வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக ஏராளமான புகார்கள் காவல்துறை யினருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளபோதிலும், எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் பாதிக்கப் பட்ட நபர்களில் ஒருவரிடமே காவல்துறையினர் இவ்வாறு தாக்குதல் சம்பவம் எதுவும் நடை பெறவில்லை என்று வற்புறுத்தி வாக்கு மூலம் கொடுக்க வைத்திருப்பதாகும்.  ஆதித்ய நாத்தின் உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஏற்கனவே இரண்டாம்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டுவிட்டனர் என்பதையே சம்பல் நிகழ்வு காட்டுகிறது. முன்னதாக, ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது, ராம்பூர், மொராதாபாத், முசாபர்நகர் தொகுதிகளில் உள்ள முஸ்லிம் பகுதிகளில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர் என்றும், வாக்களிக்கவிடாமல் அவர்களைக் காவல்துறையினர் தடுத்துள்ளனர் என்றும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.  

முஸ்லிம்களின் வாக்குரிமையை ஆணையம் பாதுகாக்காது

பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவை உறுதி செய்திட தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவற்றுக்குக்காரணமான காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கள் எடுத்திட வேண்டும். எனினும் அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் முஸ்லிம்களுக்கு எதிரான மோடியின் இழிவான பேச்சுக்களிலேயே எந்தத்தவறையும் காணாத தேர்தல் ஆணையம், முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடியின் இழிவான முஸ்லிம் விரோதப் பேச்சுக்கும், சம்பல் தொகுதி யில் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறித்திடும் உத்தரப்பிரதேச காவல்துறையின ரின் நடவடிக்கைகளுக்கும் இடையே எவ்வித முரண்பாடும் இல்லை. இரண்டும் ஒரே நேர்கோட்டில் தான் உள்ளது.

மே 15, 2024
- தமிழில்: ச.வீரமணி