states

img

கூத்துப்பறம்பு போராட்டத் தியாகி புஷ்பனை சந்தித்தார் எம்.வி.கோவிந்தன்

தலச்சேரி, செப்.11- கூத்துப்பறம்பு போராட்ட தியாகி புதுக்குடி புஷ்பனை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் வருகை தந்தார். செப்டம்பர் 9 வெள்ளியன்று எம்.வி.கோவிந்தன் புஷ்பனை சந்தித்தார். மாநிலச் செயலாளராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக புஷ்பனைச் சந்திக்க வந்த அன்புத்தோழரை, தொண்டர்கள் சால்வை அணிவித்தும், முழக்கங்கள் எழுப்பியும் வரவேற்றனர். தகவல் தெரியுமா என்ற எம்.வி.கோவிந்தனின் கேள்விக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என்று புன்னகையுடன் பதிலளித்தார் புஷ்பன். சடையன் கோவிந்தன் தினம் நிகழ்ச்சியை காலையில் நேரலையில் பார்த்ததாகவும் புஷ்பன் குறிப்பிட்டார். அத்துடன் அமைச்சராக இருந்த போது கடைசியாக பார்க்க வந்ததையும் புஷ்பன் நினைவு கூர்ந்தார். உடல்நலம் மற்றும் விவரங்களைக் கேட்டறிந்த பின் புஷ்பன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு திரும்பினார். புஷ்பனின் மனைவியும் மாதர் சங்க மாவட்டச் செயலாளருமான பி.கே.ஷியாமளா, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.சந்திரன், மாவட்டச் செயலர் பி.ஹரீந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

;