states

img

மேற்குவங்கத்தில் மாதர் சங்கம் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும், பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் தர்மதாலாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாதர் சங்க அகில இந்திய தலைவர் பி.கே.ஸ்ரீமதி, பொதுச் செயலாளர் மரியம் தவாலே, ஜனநாயக மாதர் சங்க  மேற்கு வங்க தலைவர் ஜஹானாரா கான், கனினிகா கோஷ், டெபலேனா ஹெம்ப்ராம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.