மனித குல விடுதலைக்கான தீர்வைச் சொன்னது மார்க்சியம். மார்க்சியத்தை ரஷ்ய மண்ணின் தன்மைக்கேற்ப அமல்படுத்தி போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடத் திய புரட்சியில் வெற்றி கண்டவர் லெனின்.அந்த புரட்சியில் உருவாக்கப்பட்ட சோஷலிச சோவியத் யூனியனைப் பாதுகாத்தவர் ஸ்டாலின். லெனின் உருவாக்கிய சோஷலிச சோவி யத்துக்கு எதிராக இருந்த ஏகாதிபத்தியவாதி கள், கட்சிக்குள்ளேயே இருந்த துரோகிகள், முதலாளித்துவ முகவர்களின் பலவகைப் பட்ட சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி அவற்றையெல்லாம் முறியடித்து சோஷலிசத்தையும் மார்க்சிய லெனினி யத்தையும் பாதுகாக்கும் அரணாகவும் அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார் ஸ்டாலின். ஸ்டாலினின் புரட்சிகர நடவடிக்கைகளும் சிந்தனைகளும் மார்க்சியத்திற்கும் சோஷ லிச சமூக அமைப்பிற்கும் பெரும் பங்க ளிப்பாக அமைந்திருந்தன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உலக பாசிச பயங்கரவாதியான ஹிட்லரை எதிர்த்த போராட்டத்தைத் தீரமுடன் வழி நடத்தி வெற்றி கண்டவர் ஸ்டாலின். இவரு டைய பெரு முயற்சியாலும் வழிகாட்டுதலா லும்தான் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் விடுதலை பெற்றதோடு சோஷ லிச நடுகளாகவும் மாற்றம் பெற்றன. மேலும் முதலாளித்துவச் சீர்கேடுகளால் சோஷலிச நாடுகள் சீர்குலைவதைத் தவிர்க்கும் வகை யில் சோஷலிச நாடுகளோடு முதலாளித்துவ நாடுகள் அண்டுவதைத் தடுக்கும் வகையி லான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ஸ்டாலின்தான்.
மேலும், சீனா, கியூபா, பொலி வியா,வியட்நாம், கொரியா, கம்போடியா போன்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கான புரட்சிகரப் போராட்டங்கள் அனைத்திற்கும் பேருதவி புரிந்தது மட்டுமல்லாமல், ஏகாதி பத்தியவாதிகள்- அனைத்துப் பிற்போக்கு அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட் டத்தில் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து புரட்சிகர வரலாற்றின் முன்ன ணியில் நின்றவர் ஸ்டாலின்.சுருங்கக் கூறின் உலகின் மூன்றிலொரு பகுதி நாடுகள் சோஷ லிச முகாமாக உருவாகிட காரணமாகி ஏகாதி பத்திய நாடுகளுக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார் ஸ்டாலின். பாட்டாளி வர்க்க சர்வதேசியத் தன்மை கொண்ட வெளியுறவுக் கொள்கையைப் பின் பற்றுவதற்கு சோவியத் அரசுக்கும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தலைமை தாங்கிய வர் ஸ்டாலின். உலகம் முழுவதும் மனிதர்கள் இருக்குமிடமெல்லாம் மார்க்சியம் போய்ச் சேரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் புரட்சிகரத் தத்துவ நூல்கள், புரட்சிகர இலக்கி யங்கள், சோஷலிச சமூக அமைப்பு குறித்த நூல்கள், மார்க்சிய அடிப்படையிலான வர லாற்று நூல்கள் என மார்க்சியக் கல்வி தொடர் பான அனைத்தும் உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டது ஸ்டாலின் காலத்தில்தான். பெரணமல்லூர் சேகரன்