புதுதில்லி, ஜூலை 23- குடியரசுத் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கொண் டுள்ள முடிவு ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க் கட்சிகளின் வேட்பாளர் மார்க்கரெட் ஆல்வா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில், திரிணா முல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்தினார். இதனை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக் கொண்டன. யஷ்வந்த் சின்ஹாவுக்கு தங்களின் வாக்குகளையும் அளித்தன. அதேநேரம், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மார்க்கரெட் ஆல்வா வை தங்களின் பொது வேட்பாளராக தேர்ந்தெ டுத்துள்ள நிலையில், இந்த தேர்வு தொடர்பாக தன்னிடம் முறையாக கலந்தாலோசிக்க வில்லை என்று கூறி, “குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தாங்கள் யாருக்கும் வாக்க ளிக்கப் போவதில்லை” என்று தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சிகள் மத்தி யில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் இந்த முடிவு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலை வர் வேட்பாளரான மார்க்கரெட் ஆல்வா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக மார்க்கரெட் ஆல்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், “குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து விலகிய திரிணாமுல் காங்கிரஸின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. இது ஈகோ அல்லது கோபத்திற் கான நேரம் அல்ல. இது தைரியம், தலைமை மற்றும் ஒற்றுமைக்கான நேரம். துணிச்சலின் உருவமாக இருக்கும் மம்தா பானர்ஜி நிச்சயம் எதிர்க்கட்சிகள் பக்கம் இருப்பார் என நம்பு கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக வுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கி றார்; அதன் காரணமாகவே அவர் எதிர்க்கட்சி களின் வேட்பாளரான மார்க்கரெட் ஆல்வா-வுக்கு வாக்களிப்பதில்லை என்ற முடிவை எடுத்தி ருக்கிறார் என்று ஏற்கெனவே காங்கிரஸ் மக்கள வைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் குற்றச்சாட்டு வைத்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.