states

img

அமெரிக்காவிற்கு மாம்பழம் இந்தியாவிற்கு வைக்கோல்

புதுதில்லி, ஜன.8- அமெரிக்க வேளாண்மைத் துறைக்கும் இந்தியாவின் விவசாயம் மற்றும் உழவர் நலத் துறைக்கும் (DAC&FW) இடையே ஏற்பட்ட புதிய கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அமெரிக்காவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து பழங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் வராததால் இரண்டரை ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவிற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யவில்லை. இந்த ஒப்பந்தத்தில் மாதுளையும் அடங்கும்.  மாம்பழமும், மாதுளையும்  பிப்ரவரி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமெரிக்காவிலிருந்து அல்ஃபல்ஃபா (alfalfa)வைக்கோல் (கால்நடைத்  தீவனம்) மற்றும் செர்ரிகளையும் இறக்குமதி செய்யத் தொடங்கும். நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வாரேன் என்கிற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விவசாயம் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் வசமானால் வைக்கோலை யும் இறக்குமதி செய்யும் நிலை தானே ஏற்படும்.