https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
ஜூலை 1 ஆம் தேதி கணக்கின்படி மகாத்மா காந்தி கிராமப்புற வேலையுறுதி திட்டத்தில் ஒரு மாநிலம் அல்ல, இரு மாநிலம் அல்ல, 15 மாநிலங் களுக்கு சம்பள பாக்கி உள்பட நிதியை விடுவிக் காமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்ற விபரங் கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதில் 15 மாநில நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி. மேற்குவங்கம், பீகார், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் கள் அடங்கும். பாரதிய ஜனதா கட்சி ஆளும் தொழி லாளர்கள் கூட தப்பவில்லை. 5 மாதங்களுக்கு மேலாக இந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்து போராட்டக் களத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால், அதேவேளையில், மோடி அரசாங்கத்தின் கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகளுக்கான வரிச் சலுகை மிகப் பெரிய அளவிற்கு அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 55,461 கோடி அளவிற்கு லாபத்தை குவித்த போதி லும் வரியாக வெறும் ரூ.1722 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது. உண்மையில் அவர்கள் 10 மடங்கு அதிகமாக வரி செலுத்தி இருக்க வேண்டும்.