states

img

சட்டமன்றத்தை கூட்டக்கோரி மேற்குவங்க முதல்வர் கடிதம் : திருப்பி அனுப்பி ஆளுநர் அராஜகம்

கொல்கத்தா,பிப்.20- மேற்கு வங்காள சட்டமன்றத்தை கூட்டக்கோரும் முதல்வரின் பரிந்துரைக் கடிதத்தை ஆளுநர்  திருப்பி அனுப்பினார். இதனால் அங்கு அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரும்  முதல்வர்  மம்தா பானர்ஜிக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.   இந்த நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநில சட்டமன்ற த்தை அடுத்த மாதம் 7 ஆம் தேதி கூட்டு வதற்கு ஆளுநருக்கு  பரிந்துரை அனுப்பி னார். ஆனால் அதை ஆளுநர் ஜகதீப் தங்கர் திருப்பி அனுப்பினார்.  அதையும் ஆளுநர் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’மார்ச் 7 ஆம் தேதி சட்டசபையை கூட்டுமாறு அனுப்பிய பரிந்துரை, அரசியலமைப்பு சட்டத்தின்படியான இணக்கத்துக்காக திருப்பி அனுப்ப வேண்டியதாயிற்று. ஏனென் றால் அரசியலமைப்பு விதி 166(3)-ன்கீழ், அலுவல் விதிகளுக்கு இணங்க அமைச்ச ரவையின் பரிந்துரையின்பேரில்தான் ஆளுநர் சட்டசபையை கூட்டுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தாவின் பரிந்துரையை திருப்பி அனுப்பிய ஆளுநர், ஒரு கடிதத்தை எழுதியுள் ளார். அதில் அவர் அரசியல் சாசன அமைப்பின் இணக்கத்துக்காக கோப்பு  திருப்பி அனுப்பப்படுகிறது என கூறியுள்ளார்.