states

img

வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு தயாராகிறது கொல்கத்தா

கொல்கத்தா, ஏப்.25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 11ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு கொல் கத்தா தயாராகிறது. இந்த மாநாடு மே 12 முதல் 15 வரை சால்ட் லேக் கிழக்கு மண்டல கலாச் சார மையத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டு நகருக்கு பிரபல கால்பந்து வீரர் டியாகோ மாரடோனா பெயர் சூட்டப்படுகிறது. மாநாட்டின் பகுதியாக எதிர்வரும் 12ஆம் தேதி எஸ்பிளனேட் சஹீத் மினார் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கருத்தரங்குகள், படக் கண்காட்சிகள், புத்தகக் கண்காட்சிகள், கலை கலாச்சார நிகழ்வுகள், திரைப்படம் மற்றும் விளையாட்டு கண்காட்சி கள் மாநாட்டையொட்டி நடத்தப்படும். இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, கொல்கத்தாவில் வாலிபர் சங்க அகில இந்திய மாநாடு நடத்தப்படுகிறது. முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை ஆலோசகராக கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள் ளது. பிரபல வங்காள நடிகர் சவ்யசாசி சக்ர வர்த்தி - தலைவர், பலாஸ் தாஸ் - செயலாளர் மற்றும் சவுபானிக் மித்ரா பொருளாளராக பொறுப்பு வகிக்கின்றனர்.