states

img

கேரளத்தில் அமைச்சர் சஜி செரியன் ராஜினாமா

திருவனந்தபுரம், ஜுலை 7- கேரளத்தின் கலாச்சாரம், இளைஞர் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சஜி  செரியன் தனது அமைச்சர் பதவியை புத னன்று (ஜுலை 6) ராஜினாமா செய்தார்.  பத்தனம்திட்டாவில் உள்ள மல்லப்பள்ளி யில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்  ளப்பட்டது என்றும், தான் ராஜினாமா செய்தது சுதந்திரமான தனது முடிவு என்றும் சஜி செரி யன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இந்த விமர்  சனத்தில் என்னுடைய வழக்கமான பேச்சு  நடையையும் பாணியையும் பயன்படுத்தி னேன். இது அரசமைப்புச் சட்டத்தை அவ மதிக்கும் செயலாக புரிந்து கொள்ளப்படும் என்று சற்றும் நினைக்கவில்லை. நான்  அப்படிச் சொல்லவும் இல்லை. இது குறித்து சட்டசபையிலேயே தெளிவுபடுத்தப்பட்டது. சொல்லப்பட்ட சில வார்த்தைகள் தவறான  பிரச்சாரத்திற்காக பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. எனது ஒரு மணி நேர பேச்சின் சில பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து இந்த  தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது சிபிஎம்,  இடது ஜனநாயக முன்னணி மற்றும் மாநில  அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அணுகு முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்து வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இடது ஜனநாயக முன்னணி மற்றும்  மாநில அரசின் கொள்கை அணுகுமுறை களை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் எனது பேச்சை தவறாகப் பரப்புவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொறுப் புள்ள பொதுச் செயற்பாட்டாளராக, அரச மைப்பு சாசனத்தை அவமதிக்கும் எண்ணம்  எனக்கு இல்லை. எனது உரையின் சட்ட  அம்சங்கள் குறித்து அட்வகேட் ஜெனரலிடம்  முதலமைச்சர் ஆலோசனை கேட்டுள்ளார் என்பதையும் புரிந்து கொள்கிறேன். அந்த நிலையில் நான் அமைச்சராக நீடிப்பது சரி யல்ல என சுயேச்சையாக முடிவெடுக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. எனவே எனது அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்கிறேன். எனது ராஜினாமா கடி தம் முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டுள் ளது. மதச்சார்பற்ற ஜனநாயக விழுமி யங்களை மேம்படுத்தும் வகையில் எனது  இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளி லும் நான் தொடர்ந்து முனைப்புடன் செயல்  படுவேன்” என்று தெரிவித்தார்.