2025இல் கேரளாவின் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான இலச்சினையை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறுகையில்,”2025 பிப்ரவரி 21,22 தேதிகளில் “கேர ளாவின் உலக முதலீட்டாளர் மாநாடு 2025” நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை வெளியிடப்பட்டது. இந்த முதலீட்டாளர் மாநாடு முன்ன ணியில் உள்ள தொழில்முனை வோர் மற்றும் தொழில்துறையினரை பங்கேற்க வைப்ப தன் மூலம் முதலீடுகளை ஈர்க்க ஒரு வாய்ப்பாக அமை யும். கேரளாவை “தொழில் வளர்ச்சி சக்தியாக” உருவாக்கும் பயணத்தில் இது மிக முக்கிய முன்னெ டுப்பு” என அவர் கூறியுள்ளார்.