states

img

தில்லியில் கொட்டும் மழையில் தர்ணா

கனிமொழி எம்.பி.,  அஜய் மக்கான் பங்கேற்பு

 

மோடி அரசின் பாராமுகம் : மாற்றுத்திறனாளிகள் ஆவேசம்

புதுதில்லி, ஜூலை 10 - மாற்றுத்திறனாளிகள் குரலுக்கு செவிமடுக்காமல் 11 ஆண்டுகளாக  மாதம் ரூ.300 மட்டும் வழங்கிவரும்  ஓய்வூதியத்தை  ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புது தில்லியில் திங்களன்று (ஜூலை 10)   ஆயிரக்கணக்கான மாற்றுத்திற னாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கனிமொழி எம் பி., முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையின் தலை வர்கள் உள்ளிட்ட பலர் பேசினர். ஒன்றிய பாஜக அரசு இந்திராகாந்தி ஓய்வூதியமாக வழங்கும் மாதம் ரூ.300 என்பதை ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ஐ முழுமை யாக அமல்படுத்த வேண்டும். பல்நோக்கு அடையாள அட்டையை (யுடிஐடி),  முகாம் நடத்தி நாடு  முழுவதும் சீராக வழங்க வேண்டும். அதுவரை பயன்கள் பெற யுடிஐடி-யை நிபந்தனை ஆக்கக் கூடாது. 100 நாள் வேலைத் திட்டத் திற்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்  படுத்த வேண்டும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனை வருக்கும் பணி வழங்க வேண்டும். வேலை நாட்களை 150 ஆக அதி கரிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லி ஜந்தர்மந்தரில்  திங்க ளன்று  ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்பிஆர்டி என்னும் ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை சார்பில் நடந்த இப்போராட்ட த்தில் தமிழ்நாடு, கேரளா,  கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,  உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து  அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் பங்கேற்றனர்.   சங்கத்தின் அகில இந்திய தலைவர் கிரீஷ் கீர்த்தி தலைமை வகித்தார்.  நாடாளுமன்ற உறுப்பி னர் கனிமொழி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அஜய் மக்கான், ஊன முற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, பொதுச்செயலாளர் வி.முரளீதரன்,  நிர்வாகிகள் ஜான்சிராணி, அனிபென் முகர்ஜி,  ரிஷிகேஷ் ரஜளி, அதுவய்யா, கைரளி, அகில இந்திய விவ சாயிகள் சங்க மதிப்புறு தலைவர் ஹன்னன் முல்லா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சோனியா, இந்திய மாணவர் சங்க  தலைவர் ஆதர்ஷ், மாற்றுத்திற னாளிகள் தேசிய ஒருங்கிணை ப்புக்குழு தலைவர் அர்மன் அலி உள்ளிட்டோர் பேசினர். தில்லியில் பெய்து வரும் கனமழையையும் பொருட் படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று முழக்கமிட்டனர். மழை குறுக்கிட்ட போதிலும் நனைந்தபடியும் குடையைப் பிடித்துக்கொண்டும் பங்கேற்றனர்.


 

;