states

img

திரிபுரா பாஜக அரசுக்கு ஜிதேந்திர சவுத்ரி கண்டனம்

பாஜக ஆளும் திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் உள்ள மெக்லிபாரா தேயிலைத் தோட்டத்தில் அடிக்கடி  வீடுகள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. ஜூலை 3 அன்று வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் இருவர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சிபிஎம் திரிபுரா மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து,”மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக நிலம், வீட்டுமனை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ஒன்று கூட அமல்படுத்தவில்லை. இதனால் இதுபோன்ற விபத்துகள் அரங்கேறி வருகின்றன” என பாஜக அரசிற்கு கண்டனம் தெரிவித்தார்.