புதுதில்லி, டிச.7- முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறை யிலிருக்கும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தி யது ஏற்க முடியாத விஷயம் என உச்சநீதிமன்றம் தெரி வித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை விவகா ரத்தில் பேரறிவாளன் உள்பட ஏழு போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதையடுத்து பேரறிவாளன் உச்சநீதிமன்றம் சென்றார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அமைச்ச ரவை தீர்மானத்தின் மீதான ஆளுநரின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் ஆளுநர் உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், செவ்வாயன்று (டிச.7) நடைபெற்ற விசாரணையின் போது, ‘ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் அவர் உரிய நேரத்தில் முடிவெடுக்கவில்லை’ என தமிழக அரசு வாதிட்டது. பேரறிவாளன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரறி வாளன் சிறையில் இருந்து விடுதலை செய்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்குக் காரணம் “முழுமை யான அரசியல்” என்று வாதிட்டார்.
ஒத்தி வைக்குமாறு கேட்கக்கூடாது
நீதிபதி எல். நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், வழக்கை ஒத்தி வைக்குமாறு வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்க முடியாத விஷயம். இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கை ஒத்திவைப்பதில் நீதிமன்றம் மகிழ்ச்சியடையவில்லை. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதால் ஜனவரி மாதத்துக்கு வழக்கை ஒத்திவைப்ப தாகவும் ஒன்றிய அரசு தரப்பில் இனியும் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கேட்கக் கூடாது என்றும் கூறினர்.