பூஞ்ச் பகுதியில் நிவாரணப் பணிகளை தொடங்கிய இந்திய ராணுவம்
ராணுவத்துடன் நிற்போம் ; உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சி
இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணு வம் இந்திய எல்லை மாநிலங்க ளில் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளும், வாழ்வாதாரமாக இருந்த அமைப்புகளும் சேதம டைந்ததால் ஏராளமானோர் இயல்பு நிலையை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பான இடங்களில் தங்கி யிருந்த மக்கள் தங்களது வீடு களுக்குத் திரும்பி, சீரமைப்புப் பணி களை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், பூஞ்ச் பகுதிக ளில் இந்திய ராணுவம் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ளது. ராணுவ வீரர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று அரிசி, மளிகைப்பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களையும் மருந்துகளையும் விநியோகித்த தோடு, அவர்களின் தேவைகளை யும் நேரடியாகப் பேசிக் கேட்ட றிந்து வருகின்றனர். ராணுவத்துடன் நிற்போம் இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில்,”பாகிஸ்தான் தாக்குத லால் எங்கள் பகுதிகள் கடுமையா கப் பாதிக்கப்பட்டன. இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்புப் பணியை உறுதி செய்வதில் ராணு வம் மிக முக்கியப் பங்கு வகித்தது. அதே போன்று அவர்கள் தற்போது எங்களுக்கு நிவாரணப் பொருட்க ளையும் வழங்குகிறார்கள். ராணுவ வீரர்கள் அனைவரும் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நாங்கள் இறை வனை பிரார்த்தித்துக்கொள்கி றோம். நாங்கள் அவர்களுக்கு துணை நிற்போம். அவர்கள் தீரத்து டன் எல்லைப் பகுதியில் காவல் நிற்கிறார்கள். பூஞ்ச் பகுதியில் நாங்களும் அவர்களுக்கு துணை நிற்போம்” என்று உள்ளூர் மக்கள் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரி வித்துள்ளனர்.
போலிச் செய்திகள் மூலம் ஆதாயம் தேடும் பாஜக
பூஞ்ச் பகுதிகளில் ராணுவம் மற்றும் “இந்தியா” கூட்டணியின் ஜம்மு-காஷ்மீர் அரசு மட்டுமே நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரு கிறது. வேறு எந்த கட்சிகளும், அமைப்புகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வில்லை. அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் பாஜக வழக்கம் போல போட்டோஷாப் மூலமாக ராணுவத்தின் புகைப்படங்களை எடிட் செய்து, “பூஞ்ச் பகுதிகளில் எங்கள் கட்சியின் நிவாரண உதவி” என போலி புகைப் படங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடி வருகிறது.