states

img

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ஆம் நாளான செவ்வாய்க் கிழமை அன்று  வழக்கம்போல் இரு அவை களும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது,  இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்தியா - பாகிஸ் தான் போர் நிறுத்தத்தின் பின்னணி, இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பீகாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து வெளியே வந்த “இந்தியா” கூட்டணி உறுப்பினர்கள் “மகர் துவார்” எனும்  நாடாளுமன்ற வாயிலில் கூடி பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ்  எம்.பி.,க்கள் பிரியங்கா காந்தி, கே.சி.வேணு கோபால், ஜோதிமணி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், திமுக எம்.பி.,க்கள் கனி மொழி, டி.ஆர்.பாலு, ஆ. ராசா, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மிசா பாரதி, மனோஜ் ஜா உள்ளிட்ட ஏராளமான எம்.பி.,க்கள் கைகளில் “பீகாரில் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் ஜனநாயக படுகொலை” என்ற பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பினர்.