‘மறைக்க எதுவும் இல்லையென்றால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’
தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி காட்டம்
மும்பை “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பீகார் தேர்தலிலும் நடக் கும்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்ச ரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலை யில் இந்த கருத்தை தேர்தல் ஆணை யம் ஏற்க மறுத்து கையொப்பம் இல்லாத அறிக்கை ஒன்றை வெளி யிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணை யத்தை குறிப்பிட்டு அரசியல் சாச னத்தின் படி இயங்கும் அமைப்பு, முக்கியமான கேள்விகளுக்கு தவிர்க்கும் படியாக பதிலளிப் பது உங்கள் மீதான நம்பகத்தன்மை யை பாதிக்கும் என ராகுல் குறிப் பிட்டுள்ளார். உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால் கேள்வி களுக்கு பதிலளித்து உங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்கவும், மகா ராஷ்டிர மாநிலத்தில் நடந்த தேர்த லில், வாக்குச் சாவடிகளில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளை யும் வெளியிடுங்கள் எனவும் கூறி யுள்ளார். மேலும் மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் 2024 நாடாளுமன்ற மற்றும் அதன் பின் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தல் களுக்கான வாக்காளர் பட்டியல் களை ஒன்றாக இணைத்து, காகித வடிவத்தில் இல்லாமல், கணினி கோப்பு வடிவத்தில் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யக்கூடிய வகை யில் வெளியிடுங்கள் என கூறி யுள்ளார். இரு தினங்களுக்கு முன் செய்தி பத்திரிக்கை ஒன்றில் பாஜக எப்படி யெல்லாம் தேர்தலில் ஏமாற்று வேலைகள் செய்து வெற்றி பெறு கிறது என தான் எழுதி இருந்த கட்டு ரையை தனது டிவிட்டர் எக்ஸ் பக் கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி நடை பெற உள்ள பீகார் தேர்தலிலும் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடக்கும் என எச்சரிக்கை விடுத்தி ருந்தார். குறிப்பாக மகராஷ்டிராவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு சாவடிகள் உள்ளநிலையில் 85 தொகுதிகளில் உள்ள 12 ஆயிரம் வாக்குசாவடிகளில் மட்டும் புதிய வாக்காளர்கள் அதிகளவில் ஏன் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன? இந்த 85 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான் மையுடன் வென்றது எப்படி? அங்கு கூடுதல் வாக்குப்பதிவு நடந்தது எப்படி? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காம்தி தொகுதியில் பாஜகவிற்கு 56 ஆயி ரம் வாக்குகள் அதிகரித்துள்ளது. அந்த ஆண்டு 35 ஆயிரம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். புதிய வாக்காளர்கள் அனை வரும் பாஜகவிற்கு மட்டும் வக்க ளித்தது எப்படி எனவும் கேள்வி களை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகளுக்கு பதில் தராமல், பாஜகவின் தேசிய தலை வர் நட்டா, இது அவதூறு என ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித் துள்ளார். இந்நிலையில் தான் தலைமை தேர்தல் ஆணையம் எந்த கையொப்பமும் இல்லாமல் வெளியிட்ட அறிக்கையில் இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள நிலையில், ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் ஆணை யத்தை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளார். பாஜக ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்ச மான செயல்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் தேர்தல் ஆணை யத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது குறிப்பி டத்தக்கது.