ED/CBIயை பயன்படுத்தி ஊழல் செய்தவர் களுக்கு பதவிகள் தருவதும் குதிரை பேரம் மற்றும் ஜனநாயக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பது மட்டு மல்ல; மோடி/ ஷா அரசாங்கம் தொழில் நிறு வனங்கள் மீது இந்த அமைப்புகளை ஏவி மிரட்டி கோடான கோடி பணம் பறித்துள்ளது. மிரட்டி பணம் பெறும் கலையை செழுமைப்படுத்திக் கொண்டுள்ளது இந்த அரசாங்கம். அதிகரிக்கும் வேலையின்மை/ ஊதிய மற்ற உழைப்பு/ தரக்குறைவான வேலை வாய்ப்புகள்/ சரியும் உழைப்பு பங்கேற்பு விகிதம் / வீழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப சேமிப்புகள்/ குறையும் நுகர்வு பொருள் தேவைகள்/ வேதனை அதிகரிக்கும் கடன்/ இவைதான் பெரும்பான்மையான இந்தியர்களின் நிலை! நாடு வளர்ந்த தேசமாக மாறும் லட்சணம் இதுதானா?