states

img

வரலாற்றைத் திரித்து எழுதுவோம்

2024 மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தவுடன் ‘பொது சிவில் சட்டம் உறுதி’ என்றும் பேச்சு

தில்லியில் தனியார் ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சியின் மாநாடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்று பேசியுள்ளார். அப்போது, 2024 தேர்தலுக்குப் பின் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது என்று அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “பொருத்தமான நேரத்தில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் அரசியல் நிர்ணய சபை அறிவுரை வழங்கியிருந்தது. அதை எல்லோரும் மறந்து விட்டனர். நாடும், மாநிலங்களும் மதச்சார்பற்றதாக இருக்கும்போது, ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு மதத்தினருக்கும் நாடாளுமன்றமோ, சட்டசபைகளோ நிறைவேற்றிய ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஆனால், பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக-வைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது ஜனசங்க நாள்களில் இருந்தே நாட்டு மக்களுக்கு பாஜக அளித்துவரும் வாக்குறுதியாகும். தற்போது பாஜக ஆளும் இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவர்களிடம் இருந்து இக்குழுக்கள் கருத்துகளைப் பெற்று வருகின்றன. இந்த நடைமுறையில் கிடைக்கப் பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியிலான அனைத்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளும் நிறைவடைந்த பிறகே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக தீர்மானம் கொண்டுள்ளது. அதற்கு முன்னதாக சில மாநிலங்கள் தாங்களாகவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம். ஆனால் அது நடக்கவில்லை என்றால், 2024-இல் மீண்டும் நாங்கள் (பாஜக) ஆட்சிக்கு வருவோம், அதை செயல்படுத்துவோம்.”  இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.

புதுதில்லி, நவ. 25 - “திரித்து எழுதப்பட்ட இந்திய வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், இதனை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது” என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள் ளார். வரலாற்றை மாற்றி எழுதும் இந்த முக்கியமான பணியை மேற்கொ ள்ளும் வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு துணைநிற்கும் என்றும் அமித்ஷா பகிரங்கமாக ‘தைரியம்’ ஊட்டியுள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் அசாம் மாநிலத்தை ஆட்சி புரிந்துவந்த அஹோம் ராஜ்ஜியத்தில் வீர, தீரமிக்க போர்ப்படை தளபதியாக திகழ்ந்தவர் லச்சித் போர்புகன். அசாம் மீதான முகலாயர் படை யெடுப்பை முறியடித்ததில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்று அசாம் மாநில வரலாறு கூறுகிறது. அத்துடன் அசாம் அர சானது, லச்சித் போர்புகனின் பிறந்த நாளான ‘நவம்பர் 24’-ஐ, ‘லச்சித் திவாஸ்’ என்ற பெயரில் அரசு விழா வாகவும் கொண்டாடி வருகிறது.  இந்நிலையில் லச்சித் போர்பு கனின் 400-ஆவது ‘லச்சித் திவா ஸை’ ஒட்டி, தில்லியில் அசாம் அரசு  ஏற்பாடு செய்த விழாவில் உள்துறை  அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் வரலாற்றை ‘மாற்றி’ எழுது வோம் என்று அவர் கொக்கரித்துள்  ளார். விழாவில் அவர் பேசியிருப்ப தாவது: “நமது வரலாறு நமக்குச் சரி யாக சொல்லப்படவில்லை அல்லது திரிக்கப்பட்டுள்ளதாக பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வரலாற்று மாணவனாக எனக்கும் இந்த சந்தேகம் இருந்து கொண்டேதான் உள்ளது.

அசாமில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த- முகலாய சம்ராஜ்ஜியத்துக்கே சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த லச்சித் போன்று, இந்தியாவை 150 ஆண்டுகள் ஆட்சி செய்த 30 வம்சங்கள் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய 300-க்கும் மேற்பட்ட ஆளுமைகள் குறித்த வரலாறு நமக்கு சொல்லப்படவே இல்லை அல்லது சரியாக சொல்லப்படவி்ல்லை.  தற்போதைய நமது வரலாறுகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்ற வாதத்தை இந்நிகழ்ச்சியில் அமர்ந்திருக்கும், மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஒழித்துக் கட்ட வேண்டும். அளப்பரிய வீர, தீரத்துடன் திகழ்ந்த இவர்களை குறித்து இனியாவது நம் இளம்தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தலையாய கடமை நமக்கு உள்ளது. திரித்து எழுதப்பட்ட நம் இந்திய வரலாற்றை மாற்றி எழுத தயவுகூர்ந்து நம் வரலாற்று ஆசிரி யர்கள் முன்னோக்கி வரவேண்டும். ஆராய்ச்சி செய்ய வேண்டும். வர லாற்றை மாற்றி எழுத வேண்டும். போதுமான உண்மைகள் எழுதப் பட்டுவிட்டால், பொய் வரலாறு என்ற பேச்சே ஒழிந்து போகும். இந்த ஆராய்ச்சி அனைத்திற்கும் எல்லாவிதத்திலும் ஒன்றிய பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், வரலாற்றை மாற்றி எழுதும் நமது முயற்சியை தற்போது இங்கு தடுப்பவர்கள் எவர் இருக்கிறார்கள்?”  இவ்வாறு அமித்ஷா பேசியுள்ளார்.