states

img

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவது இலவசம் அல்ல

சென்னை,செப்.5- மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அரசு தன் கடமையாக நினைக்கிறது என்று இதன் மூலம் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். புதுமைப்பெண் மற்றும் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழா திங்க ளன்று(செப்.5) சென்னை ராயபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி களில் படித்து உயர் கல்விக்காக கல் லூரிகளில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் முதல் வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாபெரும் பாய்ச்சலாக அமை யப்போகிற திட்டங்கள் தொடங்கப்பட்டுள் ளது” என்றார். எந்த விதமான பாகுபாடுமின்றி கல்வி எனும் நீரோடை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நூறாண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. உயர்ந்த சாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடி யும். அதிலும் ஆண்கள் மட்டும்தான் படிக்க  முடியும் என்ற நிலை இருந்தது. அத்தகைய காலத்தில் இடஒதுக்கீட்டை உருவாக்கி, பள்ளிகளையும் உருவாக்கியது நீதிக்கட்சி தான் எனவும் அவர் தெரிவித்தார்.

படித்தவர்களின் எண்ணிக்கை அதிக மாகும், அறிவுத்திறன் கூடும். திறைமைசாலி கள் அதிகமாக உருவாகுவார்கள். பாலின  சமத்துவம் ஏற்படும். குழந்தைத் திருமணங் கள் குறையும், பெண்கள் அதிகாரம் பெறு வார்கள். பெண்கள் சொந்தக் காலில் நிற்பார்  கள் என்றும் முதலமைச்சர் கூறினார். முன்னோடித் திட்டமாக விளங்கும் தமிழக அரசு சார்பில் சென்னையில் நடந்த விழாவில், 26 தகைசால் மற்றும் 15 மாதிரி  பள்ளிகளை தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தொடங்கி வைத்து பேசுகையில், “புதுமைப் பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது” என்றார். இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சி கள் மாநிலங்களில் இருந்தாலும், மாநில அரசு கள் பல்வேறு புதுமையான நல்ல திட்டங்க ளைக் கொண்டு வருகின்றன. அந்த அனுப வங்களை ஒவ்வொரு மாநில அரசுகளும் கற்  றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, கீதாஜீவன்,பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலை மைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

;