states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

மின்னணு அறிவு சொத்தினை கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் நான்காவது தொழிற் புரட்சிக்கு உலக அளவில் இந்தியா தலைமை யேற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி சில நாட் களுக்கு முன்பு பேசியிருக்கிறார். பிரதமர் அவர்களே, உங்களது கண்காணிப்பின் கீழ் இந்திய இணையதள துறையானது முற்றிலும் ஒரு வெறுப்பு தொழிற்சாலையாக மாற்றப்பட்டி ருக்கிறது. வெறுப்பும், பிரிவினையும் பன்முக தன்மை கொண்ட நமது நாட்டின் சமூக நல்லிணக் கத்தை சீர்குலைக்கிறது. இத்தகைய சூழலில் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை.  அதுமட்டுமல்ல, அனைத்து இந்தியர்களும் இணைய வழியில் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கி றீர்கள். ஆனால் உண்மையில் இந்தியாவில் இணைய உரிமைகள் மிகக் கடுமையாக உங்க ளது ஆட்சியில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தனி  மனிதர்களின் அந்தரங்க தகவல்கள் உள்பட  அனைத்தையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற் குள் கொண்டு வருகிறீர்கள். உலகிலேயே இணைய தள முடக்கத்தின் தலைநகரமாக இந்தியாவை மாற்றியதுதான் உங்களது டிஜிட்டல் சாதனை.