புதுதில்லி, செப். 27 - செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,303.7 கோடி டாலராக சரிந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், அந்நிய செலாவணி கையிருப்பு 59,390.4 கோடி டாலராக இருந்தது. அந்த வாரத்தில் மட்டும், அந்நிய செலாவணி கையிருப்பு 499.2 கோடி டாலா்கள் சரிந்திருந்தது. இது செப். 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், மேலும், 86.7 கோடி டாலா்கள் சரிந்து 59,303.7 கோடி டாலராக உள்ளது. கடந்த 2021 அக்டோபரில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-இல் இது சுமார் 6 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு சரிவைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகளும், செப்டம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 51.1 கோடி டாலா் சரிந்து 52,591.5 கோடி டாலராக உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 38.4 கோடி டாலா் குறைந்து 4,400 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 40 லட்சம் டாலா் குறைந்து 50.30 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.