புதுதில்லி, அக்.25- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, உயர் அதிகாரிகளை பொறுப்பாக்கி, மோடி அரசு நடத்தும் ரத யாத்திரைக்கு எதிராக, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அரசின் இந்த நட வடிக்கை நடத்தை விதிகளை மீறுவ தாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நவம்பர் 20 முதல் ஜனவரி 26 வரை ‘வளர்ச்சியின் சாதனை’ என்கிற பெயரில் விளம்பர பயணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுக்கு ‘சிறப்பு அதிகாரி’ பணி ஒதுக்குவதற்கான உத்தரவு, துறைத் தலைவர்களுக்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 9 முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலை யில், அரசாங்கமே நேரடியாக பயணத்திற்கான ஏற்பாடு செய்கிறது. இதுகுறித்து, தேர்தல் ஆணை யத்திற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதி காரி இஏஎஸ் சர்மா எழுதியுள்ள கடி தத்தில், வாக்காளர்களை பாதிக்கும் வகையில் அதிகாரிகள் தலையிடக் கூடாது என மத்திய சிவில் நடத்தை விதிகள் கூறுகின்றன என்று சுட்டிக் காட்டியுள்ளார். சர்மாவைத் தொடர்ந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயமும் ஆணையத்திடம் கடிதம் கொடுத்துள்ளார். முன்னாள் கேபினட் செயலாளர் பி.கே.சதுர் வேதி, ‘இது வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான நடவடிக்கை’ என்று விமர்சித்துள்ளார். இத னிடையே புகார்களை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 17 அன்று மோடி அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில், இணைச் செயலர்/இயக்குநர்/துணைச் செயலர் அதிகாரிகளுக்கு ‘ஜில்லா ரத பிரபாரி (சிறப்பு அலுவலர்கள்)’ என்ற பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.