இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்தது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம். வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித் தேவன், தீரன் சுந்தரலிங்கம், ஒண்டிப்பகடை, வ.உ.சிதம்பரனார், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை விளைவித்த தியாக பூமி திரு நெல்வேலி மாவட்டம். ஆனால் இன்று கவலை யளிக்கும் விதமாக சாதிவெறியர்களின் கொலை நிலமாக மாறிவருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 11 கொலைகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் 13 அன்று பாளையங்கோட்டை வட்டம், கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பட்டிய லின சமூக இளைஞர் ராஜாமணி சாதி வெறி யர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய தாயார், துணைவியார் உள்பட கீழ நத்தம் கிராம மக்கள் கிராமப் பொது இடத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று நீதி கேட்டு ராஜாமணியின் உடலை வாங்க மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரு டைய சகோதரி சந்திராசெல்வியின் மீது நடை பெற்ற கொலைவெறித் தாக்குதல் அதிர்ச்சியிலி ருந்து சமூகம் மீள்வதற்கு முன்னால் அதே மாவட்டத்தில் பட்டியலினத்தை சார்ந்த ராஜா மணியின் படுகொலை நிகழ்ந்திருக்கிறது,
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் நடை பெறக்கூடிய கொலைகளைத் தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் சாதிய கூர் உணர்ச்சி யை தொடர்ந்து அதிகரித்து, அதனையே முத லீடாக்கி செயல்படுகிற அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் அரசு கண்காணித்திட வேண்டும். சாதிய வெறியைத் தூண்டும் விதத் தில் பேசுகிறவர்களை தானாகவே முன்வந்து வருவாய்த் துறை மூலமாக புகாரைப் பெற்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். சாதி வெறுப்புக் கருத்துக்களை பரப்பும் விதத்தில் சட்ட விரோதமாக கூடுவதை தடைசெய்திட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 100க்கும் மேற்பட்ட படுகொலை வழக்கு களை துரிதமாகவும் திறமையாகவும் விசா ரணை நடத்தி வழக்குகளை முடித்து குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். மாவட்டம் முழுவதும் சிசிடிவி, ட்ரோன் கேமராக் கள் மூலம் வன்முறை நிகழ்வுகளை தீவிரமாக வும் கவனமாகவும் கண்காணித்து உரிய நட வடிக்கைகள் எடுக்க வேண்டும். இதற்கு தேவை யான நிதியை அரசு ஒதுக்கீடு செய்திட வேண் டும். சாதிய கூர்உணர்ச்சியை கையாள்வதற்கு என்றே பயிற்சி அளிக்கப்பட்ட சந்தேகத்துக்கு இடமற்ற, பொதுமக்களின் நம்பிக்கையை பெற்ற காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரி களை அரசு மாவட்டம் முழுவதும் நியமித்திட வேண்டும்.