states

img

ஈஸ்வரப்பாவை தேசத் துரோகச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கடும் சாடல்

பெங்களூரு, பிப்.21- அமைச்சராக இருந்து கொண்டு, தொடர்ந்து மதப் பதற்றத்தை ஏற் படுத்தி வரும், கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பாவை தேசத்துரோகச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் வலி யுறுத்தியுள்ளார். ஷிவமோகாவில் பஜ்ரங் தள் தொண்டர் எனக் கூறப்படும் 26 வயது ஹர்ஷா, நான்கு பேர் கொண்ட கும்ப லால் மர்மமான முறையில் படு கொலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடகத்தில் ஹிஜாப் விவகா ரத்தை வைத்து, ஏபிவிபி, பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் இஸ்லாமியர்க்கு எதிராக மதவன் முறையில் ஈடுபட்டு வரும் நிலை யில், இந்த படுகொலை நடத்திருப்ப தால், இதனையும் இஸ்லாமியர்க்கு எதிராகத் திருப்பிவிடும் வேலையில் இறங்கியுள்ளனர். “ஹர்ஷா கொலைக்கும் ஹிஜாப் விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை. இது முன்விரோதம் கார ணமாக நடந்திருப்பதாகவே சந்தே கிக்கிறோம். கொலை செய்யப்பட்ட வருக்கும், கொலையாளிகளுக்கும் இடையே ஏற்கெனவே நட்பு இருந்து பின்னர் எதிரிகளாக மாறி யுள்ளனர். இதுதொடர்பாக, மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று  போலீசார் கூறினாலும்,

பாஜக தலை வர்கள் வேண்டுமென்றே மதப்பிரச்ச னையாக மாற்ற முயன்று வருகின்ற னர். “கொல்லப்பட்ட ஹர்ஷா ஒரு சாதாரண டெய்லர். அவரை முஸ்லீம் குண்டர்கள்தான் கொன்றுள்ளனர். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில்தான் இந்தக் கொலை நடந் துள்ளது. இதை நாங்கள் சும்மா விட மாட்டோம், பொறுத்துக் கொள்ள மாட் டோம்” என்று மாநில அமைச்சராக இருக்கும் ஈஸ்வரப்பா தனது பொறுப்பையும் மறந்து, மதப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். செங்கோட்டையிலும் ஒருநாள் காவிக்கொடி பறக்கும். காவிக் கொடியே நாட்டின் தேசியக்கொடி யாகவும் மாறும் என்றும் அண்மை யில் ஈஸ்வரப்பா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த பின்னணியில், ஹர்ஷா படுகொலையை வைத்து, மற்றொரு கலவரத் தீயை ஈஸ்வரப்பா பற்ற வைத்திருப்பது,

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.  காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவ குமார், இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈஸ் வரப்பா ஒரு பைத்தியம். ஈஸ்வ ரப்பாவின் மூளைக்கும், வாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சித்தராமையாவே சாடியுள்ளார். எனவே, ஈஸ்வரப்பா மீது தேசத் துரோக வழக்குப் போட்டு கைது செய்ய வேண்டும். அவரை பாஜக உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்” என்று ஆவேசப்பட்டுள் ளார். மேலும், “நாட்டு மக்கள் யாருமே ஈஸ்வரப்பாவை மன்னிக்க மாட்டார் கள். காவிக் கொடியை தேசியக் கொடியாக செங்கோட்டையில் ஏற்று வோம் என்று பகிரங்கமாக பேசிய வர் இவர். ஆனால், பாஜக இது குறித்து வாயே திறக்காமல் மெளனம் காப்பது ஏன்?, என்றுதான் தெரிய வில்லை” என்றும் டி.கே. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.