states

தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் திணிப்பு

புதுதில்லி, ஜுன் 24-   ஒன்றிய அரசின் சர்ச்சைக்குரிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உரு வாக்குவதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவு தலைவர்களை போகஸ் குழுக்களில் என்சிஇஆர்டி ஊடுருவச் செய்துள் ளது. பல்வேறு தலைப்புகளில் 25 போகஸ் குழுக்கள்  தயாரித்த அறிக்கை யின்படி திருத்தப்பட்ட பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதில் 17 குழுக்களிலும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் சேர்க் கப்பட்டு விட்டனர். இது விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பள்ளிக ளுக்கான ஐந்தாவது பாடத்திட்ட சீர்திருத்தமாகும். பாஜக அரசாங்கத் ்தால் முதல் முறையாக இது மேற் கொள்ளப்படுகிறது. கல்வி  துறையை  காவிமயமாக்குவதை நோக்கமாக கொண்டு  2020 ல் அறி விக்கப்பட்ட  தேசிய  கல்வி  கொள்கை யின்  தொடர்ச்சியாக  போகஸ் குழுக்கள் அறிக்கை தயாரிக்க உள்ளன. இதுகுறித்து என்சிஇஆர்டி தலைவர் சக்லானி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அடங்கிய குழுக்கள்

1) தத்துவம் மற்றும் கல்வியின் நோக்கங்கள் டாக்டர். பகவதி பிரகாஷ் சர்மா (ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்பான ஜாகரன் மஞ்ச் தேசிய துணை அமைப்பாளர்), தத்தா பிகாஜி நாயக் (கோவாவில் ஆர்.எஸ்.எஸ் சார்பு வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் பொறுப்பாளர்) 2) சுற்றுச்சூழல் கல்வி பேராசிரியர். பயல் மாகோ (முன்னாள் ஏபிவிபி தேசிய துணைத் தலைவர்) 3) சமூக அறிவியல் சிஐ ஐசக் (முன்னாள் வரலாற்று ஆசிரியர், கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரி, பாரதிய விசாரகேந்திரம் கேரள செயல் தலைவர்) 4) மதிப்புக் கல்வி ஜே.பி. சிங்கால் (இந்திய அரசியல் அறிவியல் சங்கம்)