states

‘செய்தித்தாள் நிறுவனத்தின் அனுமதியின்றி இ-பேப்பரை பகிரும் வாட்ஸ்அப் குழுக்களை முடக்கிடுக!’

புதுதில்லி, டிச.29-   செய்தித்தாள் நிறுவனங்களின் அனு மதியின்றி இ-பேப்பர்கள், பி.டி.எப்.வடிவிலான பத்திரிகை பக்கங்களை சட்ட விரோதமாக பரப்பும் வாட்ஸ்அப் குழுக் களை முடக்குமாறு தில்லி உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இணையத்தின் வளர்ச்சி பல நன்மைகளை தந்தாலும், சில சட்ட விரோத செயல்களுக்கும் வழிவகைசெய் கிறது. அந்த வகையில், பல செய்தி நிறு வனங்களின் செய்தித்தாள்கள், புத்த கங்களை பி.டி.எப்.வடிவாக மாற்றி வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக  வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வரு கின்றனர். இதற்கென குழு அமைத்து  வெவ்வேறு புத்தகங்கள், செய்தித்தாள் களை குழுவில் உள்ளோருக்கு பகிர்கின்ற னர். சட்டத்திற்கு புறம்பாக பரப்பப்படும் இந்த பி.டி.எப்.,களை பலரும் டவுன்லோட் செய்து படிக்கின்றனர். உண்மையில், பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் வர்த்தக முத்திரைகள் சட்டம்,  

1999 ஆகியவற்றின் படி, தனிநபர்கள் இ-பேப்பர்களை அல்லது தனியாருக்குச் சொந்தமான வெளியீட்டின் எந்தப் பக்கத்தையும் பகிரக் கூடாது. மீறுபவர் கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். அதன்படி,  சமூக வலைதள குழுக்களில் செய்தித்தாள்களை பகிர்வதை எதிர்த்து பல செய்தித்தாள் அமைப்புகளும் நீதி மன்றத்தை அணுகியுள்ளன. அந்த வகையில், ஹிந்தியில் வெளி யாகும் டெய்னிக் பாஸ்கர் என்னும் செய்தித் தாள் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதில், தங்களது செய்தித்தாளின் இ-பேப்பரை வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வதாக குறிப்பிட்டு, 85 குழுக்களின் பெயர்களை யும் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், இ-பேப்பர்களை அனுமதியின்றி சட்ட விரோதமாக பரப்பும் வாட்ஸ்ஆப் குழுக் களை நீக்க அல்லது முடக்க வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உத்தர விட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அடுத்தாண்டு மே 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.