டேராடூன், டிச.27- உத்தரகண்ட் பள்ளியில் தலித் பெண் சமையலரை மாற்றிவிட்டு, அந்த இடத்திற்கு உயர்சாதியைச் சேர்ந்த சமையலர் நிய மிக்கப்பட்டதற்கு தலித் மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயர்சாதி சமையலர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று தலித் மாணவர்களின் பெற்றோர் பதிலடி கொடுத்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள சுகிதாங் கிராமத்தில், சுனிதா என்ற தலித் பெண், சமையல் அம்மா வாக (போஜன் மாதா) நியமிக்கப்பட்ட நிலை யில், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்சாதி பெற்றோர் மிரட்டலில் இறங்கினர். அதுவரை தங்கள் குழந்தை களை சாப்பிட அனுப்ப மாட்டோம் என்று கூறி, வீட்டிலிருந்தே டிபன் கொடுத்து விட்டனர். உயர்சாதியினரின் மிரட்டலுக்குப் பயந்து, கல்வித்துறை அதிகாரிகளும் தலித் பெண் சுனிதாவை பணியிலிருந்து நீக்கி விட்டு, தற்போது உயர்சாதியை சேர்ந்த சமை யலர் ஒருவரை நியமித்துள்ளனர்.
இந்நிலையில்தான், இந்த சாதிய பார பட்சத்தை ஏற்க முடியாது என்றும், கல் வித்துறையே தீண்டாமையை அமல்படுத்து வதா, என்று கேள்வி எழுப்பி, தலித் குழந்தை களின் பெற்றோர் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். உயர்சாதி சமையலர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று அவர்கள் கூறியுள்ள னர். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை 66 மாண வர்கள் பயிலும் இந்த பள்ளியில், 43 பேர் உயர்சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப் பட்ட பிரிவு மாணவர்கள் ஆவர். முன்பு இவர்கள் தலித் சமையலர் சமைத்ததை சாப்பிட மறுத்த நிலையில், தற்போது உயர்சாதி சமையலர் சமைத்ததை நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று 23 தலித் மாண வர்கள் கூறியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் வினீத் தோமர் தலை யிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புதிய சமையலர் சமைத்த உணவை தலித் மாணவர்கள் சாப்பிடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.