கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களை, உயிரை பணயம் வைத்து மீட்ட எலிவளை சுரங்கத் தொழிலாளி வக்கில் ஹசனுக்கு பரிசாக வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டை மோடி அரசு இடித்தது. இந்த சம்பவத்திற்கு நாடுமுழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், கட்சி ஊழியர்களுடன் எலிவளை சுரங்கத் தொழிலாளி வக்கில் ஹசன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து, உங்களுக்கும் குடும்பத்தினருக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் எனக் கோரி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.