states

தில்லி செல்லும் குழு : முதல்வர் அறிவிப்பு

சென்னை, செப்.17- தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய நீரை கர்நாட கம் உடனடியாக விடு வித்திட ஒன்றிய அரசு உத்தர விட வேண்டும் என வலி யுறுத்தி, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை  தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்தக்குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர்  பி.ஆர்.நட ராஜன் இடம்பெற்றுள்ளார்.  குழுவில் இடம் பெற்றுள் ளவர்கள் விவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். டி.ஆர்.பாலு (திமுக), ஜோதிமணி (காங்கிரஸ்), மு.தம்பித்துரை, என்.சந்திர சேகரன் (அஇஅதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ), பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ்கனி  (இயூமுலீ) ஏ.கே.பி. சின்ன ராஜ் (கொமதேக) ஆகியோர் கொண்ட குழு தில்லி செல்கிறது.  இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம்  இன்று கூடுகிறது.