states

img

பாஜக விவசாயிகள் அணி தலைவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்

திருவனந்தபுரம், மார்ச் 1 - ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்ட விவசாயிகள் மோர்ச்சா முன்னாள் செயலாளரும், பாஜக  மாவட்டக்குழு உறுப்பினருமான நெல்லநாடு சசி அக்கட்சியை விட்டு வெளியேறினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைக்க முடிவு செய்து, அற்றிங்கல் நாடாளுமன்றத் தொகுதி எல்டிஎப் வேட்பாளர் வி.ஜாய் சுற்றுப்பயணத்தில் பங்கேற்று இடதுசாரிகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித் தார்.  நெல்லநாடு சசியை வேட்பாளர் வி.ஜாய் வரவேற்றார். திருவனந்தபுரம் வெஞ்ஞாரமூட்டில் பா.ஜ.க வின் முக்கிய தலைவர் நெல்லநாடு சசி. விவசாயிகளுக்கு எதிரான பாஜக. அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.  சிபிஎம் வேட்பாளர் வி.ஜாயின் வெற்றிக்கு உழைப்ப தாகவும் தெரிவித்தார்.  வரும் நாட்களில் பாஜகவில் இருந்து மேலும் பல தொண்டர்கள் வெளியேறுவார்கள் என்று நெல்லநாடு சசி கூறினார்.  சிபிஎம் மூத்த தலைவர் என் கிருஷ்ணன் நாயர் செங்கொடியை சசியிடம் ஒப்படைத்தார்.