states

தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் மதம் சார்ந்த பெயர், சின்னங்களுடன் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு தடை?

புதுதில்லி, செப்.5- மத அடையாளங்களுடன் கூடிய பெயர்கள் மற்றும் சின்னங் களை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்  என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. சையத் வசீம் ரிஸ்வி என்பவர் இந்த மனுவைத் தாக்கல்  செய்திருந்தார். “மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது சட்டவிரோத மானது என்றால், கட்சியின் பெயரையும் மத அடிப்படையில் வைக்க முடியாது. ஆனால், பல அரசியல் கட்சிகள் மதப் பெயர்களையும் சின்னங்களையும் பயன்படுத்துகின்றன. அவர்களின் கொடிகளில் மதச் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இந்திய யூனி யன் முஸ்லிம் லீக், இந்து ஏக்தா தளம் போன்ற கட்சிகளே உதாரணம்.  எனவே, அவ்வாறு செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க  வேண்டும். மேலும், மதப் பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்தும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியல் கட்சிகளின் பெயரில், மதம் சார்ந்த பெயர்கள் மற்றும் சின்னங்களை பயன்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்கு மாறு உத்தரவிட்டுள்ளது.

;