states

img

மோடி 2 மணிநேரம்தான் தூங்குகிறாரா? இது ‘இம்சோம்னியா’ நோயின் அறிகுறி!

மும்பை, மார்ச் 23- பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திர காந்த் பாட்டீல் அண்மையில் கூறி யிருந்தார். அதுமட்டுமல்லாமல், நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக 24 மணிநேரமும் தூங்காமல் இருக்கும் பயிற்சி கள் பலவற்றை பிரதமர் மோடி எடுத்து வருவதாகவும் அவர் தெரி வித்திருந்தார். “வரலாற்றில் பிரித்விராஜ் சவு கான் காலத்தில் நாட்டில் இந்துக் கள் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்துக்கள் ஆதிக்கம் ஓங்கியது. இவர்களுக்கு அடுத்தபடியாக, பிரதமர் நரேந்திர மோடி காலத் தில்தான் மீண்டும் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற னர்” என்று ‘மோடி துதி’ பாடியிருந்தார். இந்நிலையில், பாஜக தலை வர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு, நடி கர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், “தயவுசெய்து சற்று புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தூங்க முடியா மல் இருப்பது ‘இன்சோம்னியா’ எனப்படும் நோய். அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக, அது குறித்து பெருமை பேசாதீர்கள். தயவு செய்து உங்கள் தலைவ ரின் நலனில் அக்கறை செலுத்துங் கள்” என கிண்டலாக குறிப்பிட் டுள்ளார்.