முஸ்லிம் சிறுவனை, இந்துச் சிறு வர்கள் மூலம் கன்னத்தில் அறைய வைத்த சம்பவம், உண்மையில் அரசாங்கத்தின் மனச்சாட்சியை உலுக்கி யிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. “ஆசிரியை ஒருவரே மதத்தை காரண மாக வைத்து, அந்த முஸ்லிம் குழந்தையை அடிக்க ஆணையிடுகிறார் என்றால் இது மிகவும் தீவிரமான பிரச்சனை” என்றும், “மதப்பாகுபாடு காரணமாகவே முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை கூறியிருக்கும்போது, அந்த விஷ யத்தையே எப்ஐஆரில் உ.பி. அரசாங்கம் மறைத்தது ஏன்?” என்றும் நீதிபதிகள் கேள்வி களை எழுப்பியுள்ளனர். குழந்தைகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதற்கு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முழுமையான தடை உள்ளது. அப்படியிருக்கும் போது ஒரு மாணவர் தாக்கப்படுகிறார்; அதிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற் காகவே தண்டிக்கப்படுகிறார் என்றால், அது எவ்வாறு தரமான கல்வியாக இருக்க முடியும்? தரமான கல்வி என்பது, மனிதநேயம் என்ற உணர்வுப்பூர்வமான விஷயத்தையும் உள்ளடக்கியதுதான் என்று கூறியிருக்கும் நீதிபதிகள், ஆசிரியை நடந்த விதம் அரசாங்கத்தின் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். முடிவாக, இந்த விவகாரத்தில், மூத்த ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் நீதிபதிகள், இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ பிரிவின் கீழ் வெறுப்புப் பேச்சுக் குற்றம் நிகழ்ந்துள்ளதா? என்பதை, ஐபிஎஸ் அதி காரி ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள் ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் குழந்தை மற்றும் சக இந்துக் குழந்தைகளுக்கு, ஒரு தொழில்முறை ஆலோசகர் மூலம் முறை யான ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க வேண்டும் என்றும் உ.பி. பாஜக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், மன்சூர்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குப்பாபூர் கிராமத்திலுள்ள ‘நேஹா பப்ளிக் ஸ்கூல்’ என்ற தனியார் பள்ளியை நடத்தி வருபவர் திராப்தி தியாகி. இவர்தான் ஒன்றுமறியாத பிஞ்சு மாணவர்களின் மனத்தில் மதவெறி என்ற நஞ்சை கலக்கும் வகையில், 7 வயது முஸ்லிம் சிறுவனை, உடன் படிக்கும் இந்துச் சிறுவர்கள் மூலம் வரிசையாக வந்து கன்னத்தில் அறைய வைத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியான பின்னணியில், ஆசிரியை திராப்தி தியாகி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 504 ஆகிய பிரிவுகளின்கீழ் மட்டும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த இரு பிரிவு களுமே ஜாமீனில் வெளிவரக் கூடியவை என்பதுடன், உடனடி கைது நடவடிக்கை தேவைப்படாத பிரிவுகள். இந்நிலையில், ஆசிரியை திராப்தி தியாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில்தான், உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. துஷார் காந்தியின் கோரிக்கைப்படி, திராப்தி தியாகி மீது சிறார் நீதிச் சட்டத்தின் (JJ) பிரிவு 75(2) மற்றும் ஐபிசி-யின் 153A (வெவ் வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழும் நட வடிக்கை வேண்டுமா? என்பதை ஐபிஎஸ் அதி காரி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தர விட்டுள்ளது. முன்னதாக உ.பி. அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ASG) கே.எம். நடராஜ் ஆஜரானார். அவரிடம், நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதற்கு 2 வாரம் தாமதம் செய்தது ஏன்? என்று உ.பி. அரசுக்கு தங்களின் கடும் ஆட்சேப ணைகளையும் நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் சார்பில் துஷார் காந்தி சார்பில் வழக்கறிஞர் ஷதன் பராசத் ஆஜரானார்.