states

மதமாற்றத்தை பூதாகரமாக்கும் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு நீதிமன்றங்களையே ‘கருவியாக்கும்’ சங்-பரிவாரங்கள்!

புதுதில்லி, டிச.6- “கட்டாய மதமாற்றங்கள் நாட்  டின் அரசியலமைப்புக்கு எதிரா னது” எனவும், “பணம், பரிசுப் பொருட்  களை வழங்கி மதமாற்றம் செய்வது  ஆபத்தானது” என்றும் உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது. அங்கொன்றும் இங்கொன்று மாக நடக்கும் மதமாற்றத்தை பூதா கரமாக்கி, ஏதோ, நாடு முழுவதும் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு வேலை மட்டுமே நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை சங்-பரிவாரங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்  கும் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது அவர்களின் திட்டமாகும். அத்துடன் வேலையின்மை, விலை வாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் எளிதில் கண்  மறைப்பு செய்ய முடியும் என்பது  பாஜகவினரின் கணக்கு. அந்த வகை யில், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை  அமல்படுத்தும் தங்களின் இந்த  சதித்திட்டத்தில், மோசடி புள்ளிவிவ ரங்கள் மூலம் நீதிமன்றங்களையே தவறாக வழிநடத்தவும் அவர்கள் துணிந்து விட்டனர். அந்த வகையிலேயே, “மிரட் டல், அச்சுறுத்தல், பரிசுகள் மற்றும்  பணப் பலன்கள் மூலம் மதமாற்றங்  கள் நடப்பதாக”வும், “இதனைக் கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் பாஜக-வைச் சேர்ந்த வழக்க றிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். “கட்டாய மதமாற்றமானது, பட்டி யல் வகுப்பினர் மற்றும் பழங்குடி யின மக்கள் மத்தியிலேயே அதிகம் நடப்பதாக”வும், “இது அரசியல்  சட்டப்பிரிவுகள் 14, 21, 25 ஆகிய வற்றுக்கு எதிரானது மட்டுமல்லா மல், மதச்சார்பின்மைக்கு விடுக் கப்பட்டுள்ள சவால்” என்றும் அஸ்வினிகுமார் உபாத்யாய தனது மனுவில் ‘போலிக் கண்ணீர்’ வடித்தி ருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதி பதிகள் எம்.ஆர். ஷா, ஹீமா கோலி  அமர்வில், திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஒடிசா, மத்தியப் பிரதேசம், குஜ ராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தர கண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாட கம், ஹரியானா ஆகிய மாநிலங்க ளில் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக ஒன்  றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில், ஒன்  றிய அரசுத் தரப்பில் அறிக்கை  தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். “நாங்கள் மாநிலங்க ளில் இருந்து தகவல்களை சேக ரிக்கிறோம். எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்” என்று  கேட்டுக் கொண்டார். “நம்பிக்கை யின் அடிப்படையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் ஒருவர் மதம் மாறு கிறாரா, அல்லது ஆசை காட்டியும்,  அச்சுறுத்துவதாலும் மதம் மாறு கிறாரா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார். 

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “ஒவ்வொரு தொண்டு அல்லது நல்ல செயலும் வர வேற்கப்படுகிறது; ஆனால் அந்த  தொண்டின் நோக்கம்தான் இங்கு முக்கியம். தொண்டுகளின் நோக்கம் மதமாற்றமாக இருக்கக் கூடாது” என்று கூறினர். “கட்டாய மதமாற் றங்களைத் தடுக்க, ஒன்றிய அரசு நேர்மையான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். இல்லையேல் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி வரும்” என்று கூறிய நீதிபதிகள், “நீங்கள் (ஒன்றிய அரசு) என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று விவரிக்க வேண்டும், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள் ளது” என்றும் குறிப்பிட்டனர்.  மேலும், “கட்டாய மதமாற்றம், நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர்  மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது” என்று கூறிய நீதிபதிகள், இது  நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக உள்ளதால், இந்த விவகா ரத்தில் ஒன்றிய அரசின் நிலைப்பாடு மற்றும் அதனைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களிடமிருந்து விரி வான தகவல்களைப் பெற்று, அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர். வழக்கையும் டிசம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.