states

img

தில்லி சிஎன்ஜி நிலையத்தில் 3 பேர் படுகொலை

தில்லி குருகிராம் விரைவு சாலையில் உள்ள சிஎன்ஜி நிலையத்தில் ஊழியர்கள் 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 
தில்லி குருகிராம் விரைவு சாலையில் உள்ள சிஎன்ஜி நிலையத்தில்  இன்று அதிகாலை 3 மணிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நிலைய மேலாளர் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர். 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  விசாரணையில் பணம் எதுவும் திருடப்படவில்லை என்பதும், கொலைக்கு முன்பாக சிசிடிவி கேமராக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.