states

கொரோனா ஊரடங்கில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு

புதுதில்லி,பிப்.11- கொரோனா தொற்று பரவலை தடுக்க அமல் படுத்தப்பட்ட முதல் ஊரட ங்கில் 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த,எந்தவித முன்னேற்பாடுகளும் செய் யாமல்  கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்  முறையாக ஒன்றிய பாஜக அரசு ஊரடங்கைநாடு முழுவ தும் அமல்படுத்தியது. இத னால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள் மிகுந்த துயரமடைந்தனர். இந்நிலையில் கொரோ னா முதல் முழு ஊரடங்கின் போது 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதில் 16 லட்சம் பேர் ஆண் கள். 7 லட்சம் பெண்கள் வேலையை பறி கொடுத்துள் ளனர் என்று நாடாளு மன்றத்தில் தொழிலாளர் -வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், கல்வி, வர்த்த கம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளின் புள்ளி விவரங்களில் இருந்து இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. இந்த 9 துறைகளில் முதல்  முழு ஊரடங்குக்கு முன்பு (25 மார்ச் 2020) ஆண் ஊழி யர்களின் எண்ணிக்கை 2.17  கோடியாக இருந்தது. ஜூலை  1 ஆம் தேதி 2.01 கோடியாக குறைந்துள்ளது. பெண் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 லட்சம் குறை ந்து 90 லட்சத்தில் இருந்து 83.3 லட்சமாக உள்ளது.