புதுதில்லி, ஏப். 11 - மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. “முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங் கிணைப்பாளர்களாக பணிய மர்த்தும் தமிழக அரசின் முன் மொழிவு, பணியாளர்களை கட்டாயப்படுத்தவில்லை. அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லா தவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். மற்றபடி ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர் நியமனம் தொடர வேண்டும்” என்று உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 2021-இல் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும்; மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்படுவார்கள்;
மாத ஊதியமாக ரூ. 7,500 வழங்கப் படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்கப் பட்டது. இதனை பெரும்பாலான மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 22 அன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில், செவ்வாயன்று தீர்ப்பு வழங்கிய எம்.ஆர். ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நிய மனம் செய்ய ஒப்புதல் அளிக்கி றோம். மாதம் ரூ. 7,500 ஊதியத்தில் மக்கள் நலப் பணியாளர்களை வேலையில் அமர்த்திய தமிழக அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறோம். 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலை வழங்கியது செல்லும். ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர் நியமனம் தொடர வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.