முகமது ஜூபைர் கைதுக்கு இந் திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) கடுமையான கண்ட னத்தை வெளியிட்டுள்ளது. ஜூபைரை விடுதலை செய்து பிரதமர் மோடி தனது வாக்கு றுதியை காப்பாற்ற வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளது. “முகம்மது ஜூபைர் கடந்த சில ஆண்டுகளாக வெகு சிறப்பான செயல் களைச் செய்து வருகிறார். அவரும் அவரது ‘ஆல்ட் நியூஸ்’ நிறுவனமும் போலிச் செய்திகளை கடந்த சில ஆண் டுகளாக அம்பலப் படுத்தி வருகின்றன. அவை அனைத்தையும் உண்மை யின் ஆதாரங்களோடு செய் கின்றன. உண்மையில் சொல்லப் போனால், அவர் ஆளுங் கட்சி செய்தித் தொடர்பாள ரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். அதன் பின்னர்தான் சம்பந்தப் பட்ட கட்சி தனது நடவடிக்கை களில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த முகம்மது ஜூபைரின் கைது கண்டனத்துக்குரியது. இந்த சமூகத்தை போலித் தகவல்கள் மூலம் பிரித்தாள நினைப்பவர்களை கண்டிக்கிறோம். ‘ஜி7’ மாநாட்டில் வெளி யிடப்பட்ட கூட்டறிக்கையில், நாடுகள் வெளிப்படையான பொது விவாதம், சுதந்திர மான ஊடகம், வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு ஆகியனவற்றை ஊக்கு விப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். எனவே, பிரதமர் தாம் அளித்த வாக்குறுதியின்படி முகம்மது ஜூபைர் விடுத லைக்கு வழிவகுக்க வேண் டும்” என்று இந்திய பத்தி ரிகை ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.