- நாங்கள் பாஜகவிற்கு ஒரு போதும் பயப்பட மாட்டோம். ஆம் ஆத்மி தொண்டர்கள், எம்எல் ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் சிறை செல்ல தயாராக இருக்க வேண்டும். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்யப்போவதாக பாஜக மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ் ரிவால் சட்டப்பேரவை யில் மேற்கண்டவாறு பேசினார்.
- உதய்பூரில் தையல் காரர் கொலை மற்றும் காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி உசேன் கைது செய்யப் பட்டது என இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது பாஜக உறுப்பினர்கள் தான். என்ஐஏ விசாரணை யை விரிவுபடுத்த வேண் டும் என்று ராஜஸ்தான் காங் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா கோரி யுள்ளார்.
- தமிழ்நாட்டில் 6 முதல் 10-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் 7 பாட வேளைகள் நடத்தப் பட்டு வந்த நிலையில் அது 6 ஆக குறைக்கப் படுவதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.சமூக அறிவியல் பாடத் திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டு ள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.
- ஸ்பைஸ்ஜெட் நிறு வனத்தை சேர்ந்த எஸ்ஜி-11 விமானம் தில்லி யிலிருந்து துபாய் நோக்கி 150 பயணிகளுடன் செவ்வாயன்று காலை புறப் பட்டுச் சென்றது. பாகிஸ் தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த பொழுது தொழில்நுட்பக் கோளாறால் அந்நாட்டின் கராச்சி விமான நிலைய த்தில் அவசரமாக தரை யிறக்கப்பட்டது.
- அக்னிபாதை திட்டத்தை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத் தில் மேலும் ஒரு பொது நல மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் தற் போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனா கட்சி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் எம்பியு மான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5-ஆ வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக் கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
- நியூசிலாந்து நாட்டில் 2 பேருக்கு முதன்முறை யாக ஒமைக்ரான் பிஏ. 2.75 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதித்த நபர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து சென்றது தெரிய வந்துள்ளது. பிஏ.2.75 வைரஸ் இந்தியா உள்ளி ட்ட 7 நாடுகளில் பரவி இருப்பதை உலக சுகா தார மையம் ஏற்கனவே கூறியிருந்தது.