states

தீக்கதிர் விரைவு செய்திகள்

வரத்து அதிகரித்ததால் காய்கறி விலை குறைந்தது

சென்னை,ஆக.13-  சென்னை கோயம்பேடு, காய்கறி சந்தைக்கு  470 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்ததால் விலை உச்சத் தில் இருந்த தக்காளி உள்பட பல காய்கறி கள் விலை குறைந்தது. தக்காளி மட்டும் 36 லாரிகளில் வந்து இருந்தன. வரத்து அதிகரிப்பு காரண மாக பீன்ஸ், ஊட்டி கேரட், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் படிப்படியாக விலை குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ40-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் கடந்த மாதம் உச்சத்தில் இருந்து வந்த தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தக்காளி மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.50-க்கும் சில்லறை விற்பனை கடை களில் ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்கப் படுகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை விற்கப்பட்ட காய்கறிகள் மொத்த விற்பனை விலை வருமாறு (கிலோவில்):- நாசிக் வெங்காயம்-ரூ.28, சின்ன வெங்காயம்-ரூ.60, உருளைக்கிழங்கு-ரூ.30, பீன்ஸ்- ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, உஜாலா கத்தரிக்காய்-ரூ.25, வரி கத்த ரிக்காய்-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.30, அவரைக்காய்-ரூ.25, வெண்டைக்காய்-ரூ.15, கோவக்காய்-ரூ.12, பாகற்காய்-ரூ.35, முள்ளங்கி-ரூ.20, குடை மிளகாய் -ரூ.40, புடலங்காய்-ரூ.15, சுரக்காய்-ரூ.10, பச்சை மிளகாய் -ரூ.45, இஞ்சி-ரூ.190.ஆக இருந்தது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்தது

ஒகேனக்கல்,ஆக.13-  கர்நாடகாவில் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறைந்தததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்தது.  கேரளா ஆகிய மாநிலங்களில் பருவ மழை காரணமாக கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து அதிகரித்தது.  இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத் திற்கு வந்தடையும். இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது பருவமழை பெய்யாததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ கத்திற்கு திறந்து விடப்பட்டு தண்ணீரின் அளவும் குறைந்ததாலும், தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.  ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிறு அன்று 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.  ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாள் என்பதால் தருமபுரி மாவட்ட  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கிரு ஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.   இதன் காரணமாக பரிசல் நிலையம், மீன் கடைகள், கடைவீதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப் பட்டன. சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும், எண்ணை மசாஜ் செய்து அரு விகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.  தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் கர்நாடகா அணைகளில் இருந்து நீர் வெளியேற்றமும் குறைந்துள் ளது. இதன்காரணமாக ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து குறைந்தளவே வந்து கொண்டிருக்கிறது.

பாஜகவிலிருந்து விலகினார் டாக்டர் சந்திரசேகர்

தெலுங்கானா, ஆக.13- பாஜக தலைவரும், தெலுங்கானா மாநிலம் விகாராபாத்  தொகுதியில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான டாக்டர் சந்திரசேகர் பாஜக-விலிருந்து விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர்  ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், பாஜக மாநிலத் தலைவர் ஜி.கிஷன் ரெட்டிக்கு எழுதி யுள்ள கடிதத்தில், “தெலுங்கானாவில் கட்சி முன்னேறுவது போல் தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சித் தலைமை தன்னை சரியாக நடத்தவில்லை என்றும், கடந்த மாதம் வாரங்கலில் பிரதமர் நரேந்திர மோடியின்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதையும் அவர் குற்றச்சாட்டாகக் கூறியுள்ளார். மேலும், ஊழல் மற்றும் தவறான ஆட்சியை நடத்தி  வரும் சந்திரசேகரராவ் ஆட்சி குறித்து பாஜக கண்டுகொள்ள வில்லை. மெத்தனமாக உள்ளது.  சந்திரசேகர ராவின் ஊழலை பாஜக பெரிதாகக் கருதவில்லை என்றும் கூறியுள்ளார். டாக்டர். சந்திரசேகர் காங்கிரசில் சேர வாய்ப்புள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர், ஏ.ரேவந்த் ரெட்டி, அவரைக் காங்கிரசுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி களை ஒருங்கிணைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்திற்கு  வெடிகுண்டு வைத்து தகர்ப்பது போல ‘ரீல்ஸ்’ போட்டவர்கள் கைது

மலப்புரம், ஆக.13- பிரபலமடைய ஆசைப்பட்டு காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுபோல ‘ரீல்ஸ்’ போட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மலப்புரம் மாவட்டம் பொடுவன்னிக்கல் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரீல்ஸ் தயாரித்து பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், பிரபலமடைய ஆசைப் பட்ட அந்த இளைஞர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராபிக்ஸுடன் புதிய ரீல்ஸ் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.  சினிமா வசனங்களுடன் காவல் நிலையத்தை வெடி குண்டு வைத்து தகர்ப்பதுபோல கிராபிக்ஸ் காட்சிகளுடன் ரீல்ஸ் தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இந்த  வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், பொடு வன்னிக்கல் பகுதியைச் சேர்ந்த முஹமது ரியாஸ் (25), முகமது ஹவாஸ் (22), சலீம் (20), முஹம்மது ஜாசிம் (19), சல்மானுல் பாரிஸ் (19), சல்மானுல் பாரிஸ் (19) ஆகிய ஐந்து  இளைஞர்கள் மீது மெலட்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

உத்தராகண்ட் நிலச்சரிவு: 5 பேர் பலி

ருத்ரபிரயாக், ஆக.13- உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம் தர்சாலி பகுதியில் கடந்த வியாழனன்று இரவு கனமழை பெய்தது. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஞாயிறன்று அதிகாலை மண்ணில் புதைந்த காரை மீட்டனர். பின்னர், காரின் உள்ளே சிக்கிய 5 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. காரில் இருந்தவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

என்.டி.ஆர். படத்துடன்  நூறு ரூபாய் நாணயம்

விஜயவாடா, ஆக.13- தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், என்.டி.ராமாராவின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை, தில்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆக.28 அன்று வெளியிட உள்ளதாக, ஆந்திர மாநில பாஜக தலைவரும், என்.டி.ஆரின் மகளுமான புரந்தேஸ்வரி ஞாயிறன்று தெரிவித்தார்.