states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. “சீர்மிகு கிராமங்கள்” திட்டத்தை மேம்படுத்து வதற்காக ரூ.4,800 கோடியை ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. உளவு பார்க்கப் பயன் படக்கூடிய பறவை களின் இறந்த உடலைப் பயன்படுத்தி புதிய வகையிலான டிரோன் களை நியூ மெக்சிகோ வைச் (அமெரிக்கா) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
  3. அதிமுகவினர் சொல்வ தெல்லாம் வேதவாக்கு அல்ல. தோல்வியின் விளிம்பில் உள்ள அதி முகவினர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக் கின்றனர் என ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
  4. தென் ஆப்பிரிக்கா நாட்டில் திடீரென வெளுத்து வாங்கிய கன மழையால் முக்கிய நக ரங்களில் பெருக்கெடு த்து ஓடிய, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
  5. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நாகர் கோவில் காசிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி வாதிட்டது.
  6. இடைத்தேர்தல் நடை பெறும் ஈரோடு கிழக்கு பகுதியில் உரிய ஆவ ணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.37 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.
  7. கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள அலக்காயி பகுதியைச் சேர்ந்த அஞ்சுஸ்ரீ பார்வதி  ஆன்லைனில் மந்தி பிரி யாணி ஆர்டர் செய்து குடும்பத்தினர், நண்பர் களுடன் சேர்ந்து சாப்பிட்ட பின்பு திடீ ரென உயிரிழந்தார். தரமற்ற மந்தி பிரியாணி சாப்பிட்டதால் பார்வதி உயிரிழந்தார் என தகவல் வெளியாகிய நிலை யில், பார்வதி உயிரிழந்த தற்கு எலி விஷமே கார ணம் என பிரேத பரிசோத னையில் தெரியவந்துள் ளது. அவர் செல்போனில் எலி விஷம் குறித்து தேடி யுள்ளதும், தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.

உலகச் செய்திகள்

  • ரஷ்யாவுடனான மோதலைத் தொடருமாறு உக்ரைனை அமெரிக்கா தொடர்ந்து ஏவி விடுகிறது என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. ரஷ்யா வின் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. உக்ரைன் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. எந்தப் பகுதிகளைத் தனது பக்கம் சேர்த்துக் கொள்ள ரஷ்யா விரும்பியதோ, அதை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் விடாமல் சண்டை போடுமாறு, உக்ரைனை அமெரிக்கா வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
  • கடந்த ஓராண்டு காலமாகவே கடுமையான விலை உயர்வால் எகிப்து மக்கள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறார்கள்.  தலைநகர் கெய்ரோவில் வாழும் ஹசன் அப்துல் ரகுமான், “அடிப்படை யில் தேவையான சில பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சில பொருட்களைப் பல குடும்பங்களால் வாங்கவே முடியவில்லை” என்கிறார். டிசம்பர் 2022ல் எகிப்தின் பணவீக்கம் 21.9 விழுக்காடாக இருந்தது. பெரும்பாலான மக்களின் வருமானம் மதிப்பு இழந்ததால், பண நெருக்கடியால் அவர்கள் தவிக்கிறார்கள்.
  • வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு உறவுகள் பற்றி கியூபாவும், அல்ஜீரியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இரு நாடு களின் அரசு மட்டத்திலான ஆணையத்தின் 23வது கூட்டத்தில் பேசிய கியூபாவின் அந்நிய வர்த்தக அமைச்சர் ரோட்ரிகோ மால்மியர்கா, “சரக்குகளையும், சேவைகளையும் விரிவடைந்த ஏற்றுமதி செய்வதில் நாங்கள் முனைப்பாக இருக்கிறோம். அதோடு பல்வேறு துறைகளில் முதலீடுகளையும் ஈரக்கவிருக்கிறோம். இருதரப்பு உடன்பாடு ஒன்று கையெழுத்தாகவுள்ளது” என்றார்.