states

பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் மீது தீண்டாமைக் கொடுமைகள், தாக்குதல்கள்

மதுரை, ஏப்.21-  தமிழகத்தில் பட்டியலின ஊராட்சித் தலை வர்கள் மீது தீண்டாமைக் கொடுமைகள், தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எவிடெ ன்ஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மதுரையை தலைமையிட மாகக்கொண்டு இயங்கி வரும்  எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் ஏ.கதிர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:   தமிழகத்தில் பட்டியலின ஊராட்சித் தலை வர்கள் மீது சாதி ரீதியான பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து எவிடென்ஸ் அமைப்பின் சார்பில்  தமிழகம் முழுவதும்  19 மாவட்டங்களில் 114 பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் உள்ள ஊராட்சிகளுக்குச்சென்று நேரடி யாக ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது பட்டியலின ஊராட்சித் தலைவர்கள், பிற சமூகத்தைச் சேர்ந்த துணைத்தலைவர்கள் மற்றும் ஊராட்சிச் செயலர்களால் தீண்டாமை  கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இதில் தேனி, மதுரை, விருது நகர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பட்டியலின ஊராட்சித் தலை வர்கள் அதிகளவு தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.  மேலும் தனது பணி யில் நேர்மையாக இருந்ததற்காக, கிருஷ்ண கிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தார வேந்திரம் ஊராட்சித்தலைவர் நரசிம்மமூர்த்தி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

 பட்டியலின ஊராட்சித்தலைவர்களை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுப்பது, அலு வலகத்தில் இதர உறுப்பினர்களுக்கு சரி சமமாக இருக்கையில் அமரவிடாமல்  தடுப்பது,   பொது வெளியில் பங்கேற்க விடா மல் தடுப்பது, அலுவலகத்தில் நுழைய  விடாமல் தடுப்பது, அலுவலக பெயர்ப்பல கையை சேதப்படுத்துவது, தீர்மானங்களில் குறுக்கீடு செய்வது, ஊராட்சித் தலைவர் என்ற முறையில் கோயில் திருவிழாக்களில் பங்கேற்க விடாமல் தடுப்பது உள்ளிட்ட கொடுமைகள் நடைபெற்றுள்ளன. மேலும்  பட்டியலின ஊராட்சி பெண் தலைவர்கள் மீது  பாலியல் கொடுமைகள், தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. மேலும் குளியல் தொட்டிகள் மற்றும் ஊராட்சி அலுவலக வாயிலில் மலம் கழிப்பது போன்ற கொடுமைகளும் இழைக்கப்படுகின்றன.   இதுதொடர்பாக காவல்நிலையங்களில் புகார் அளித்தாலும் கூட நடவடிக்கை எடுப் பது இல்லை. மேலும் பட்டியலினத்தவ ருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் படித்த வர்களை புறக்கணித்துவிட்டு கல்வியறிவு அற்றவர்களை ஆதிக்கச்சாதியினரே தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து தங்கள் கைப்பாவைகளாக மாற்றுவது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் பெரும்பாலும் விவசாய  தினக்கூலிகளாக உள்ளனர். நிலையான வருவாய் எதுவும்  இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி பட்டியலின ஊராட்சித்தலைவர்கள் தங்கள் கிராமங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர்.

அரசு ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிடுக!

எனவே பட்டியலின ஊராட்சித் தலை வர்கள் மீது நடத்தப்படும் தீண்டாமைக்கொடு மைகள் குறித்து அரசு உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு நடத்தி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தீண்டாமைக் கொடுமைகளை களையும் வகையில் மாநில அளவில்  மைய அதிகாரி நியமிக்கப்பட  வேண்டும். பட்டியலின ஊராட்சித் தலை வர்களை பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்பு திருத்தச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று   ஊடகங்கள் மூலம் சுற்றறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். பட்டியலின ஊராட்சித்தலைவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.10  ஆயிரம் வழங்க வேண்டும். தீண்டாமை பாகுபாடுகளை களைய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்  தலை மையில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். பொது பங்கேற்பில் ஊராட்சித் தலைவர்களை தடுப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அச்சுறுத்தல் உள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பட்டியலின ஊராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுத்து ரூ.25  லட்சம் பரிசுத்தொகையாக வழங்க வேண்டும். ஊராட்சிகளில் ரேசன்  கடைகள், கழிப்பறை போன்ற  பொதுக்கட்டுமானங்களை பட்டிய லினத்தவர் பகுதிகளில் அமைக்க வேண்டும். பட்டியலின ஊராட்சித் தலைவர்கள் உள்ள இடங்களில் துணைத்தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக நியமிக்கப்படவேண்டும். இந்த பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.